VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Sunday, 26 October 2014

தலைவிதியை மாற்றியமைக்கும் வழி சோதிடசாத்திரதில் இல்லை. அப்படியிருந்திருந்தால் உலகில் அனைவராலும் மதிக்கக்கூடிய கோடீஸ்வரக் கலைஞர்கள் நாம் தான் !!!

அன்புடன் எனது நண்பரும்,மாணவரும், போடிநாயக்கனூரின் சோதிடப் பெரியோருமாகிய திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கங்கள் பல. தாங்கள் அனுப்புகின்ற வினாக்களுக்கு நன்றிகள். தங்களின் வினாக்களுக்கு பதில்கள் விரிவாகவும், விளக்கமாகவும் எழுத வேண்டியுள்ளது. எனவே விளக்கமான பதில்களை நூலில் காண்க. தங்களின் ஆர்வம் காரணமாக சுருக்கமான பதில்கள் இங்கு கொடுக்கப்படுகின்றது.   வினா எண் ; 1. ஒருவரின் தலைவிதியை சோதிடப்பலன்கள் மாற்றமடைய செய்யுமா?     நிச்சயமாக முடியாது. சோதிடப்பலன்கள் எதிர்காலத்தில் ஒருவருக்கு என்ன நடக்கும் என்று கூறுகிறதே தவிர மாற்றியமைக்கும்...

Wednesday, 22 October 2014

இந்து சமயம் - அறிந்து கொள்ளுங்கள் -7---22/10/2014

இந்தோ-ஆரியர் ; உலகத்தின் தொன்மையான வைதீக சமயம்,சனாதன சமயம் என்று புகழப்படுகிற இந்து சமயத்தை தோற்றுவித்தவர்கள் இந்தோ- ஆரியர்கள் ஆவர்.இந்துகுஸ் மலைப்பகுதிகளிலும்,  சிந்து நதிகளின் நிலப்              பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் இந்தோ-ஈரானியர்கள் குடி பெயர்ந்துள்ளனர். அக்குடிப்பெயர்ச்சியினால் ஏற்கனவே இருந்த இறைவழி பாட்டு அமைப்புகளை மாற்றினர். தங்களுடைய கடவுள்கள் அனைத்து அச்சங்களையும் அழிக்கக்கூடியவர்கள் என்றனர். அதன்படி தாங்கள் ஏற்கனவே ஈரான் பகுதிகளில் அறிந்து கொண்ட இறை வழிபாட்டு அமைப்பையும்...

Tuesday, 30 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்--6 29/09/2014.

இந்தோ-ஈரானியர்கள் : இந்திய -ஐரோப்பியக் கலாச்சாரம், தனக்குள் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது. அவை, இந்தோ-ஈரானியம், இந்தோ-ஆர்யம்,ஆர்யம் என்று பிரிகின்றன.இவற்றின் தலைப்பிற்கேற்ப சிறிய குறிப்புகளாக விளக்க முற்படுகிறேன்.இந்தொ-ஈரானியர்கள் என்று அழைக்கப் படுபவர்கள்,யூப்ரடீஸ்-டைகிரீஸ் நதி சார்ந்து வாழ்ந்தமக்கள் என்று முன்னரே அறிந்துள்ளோம்.இந் நாகரீகத்தின் எல்லைப் பகுதிகளாக வடக்கே அனடொலியன் பீடபூமியும்,தெற்கே பாரசீக வளைகுடாவும்,மேற்கே அரேபிய- சிரியா பாலைவனப் பகுதிகளும்,கிழக்கே ஈரானிய பீடபூமிகளாகவும் இருந்துள்ளன. இக்கலாச்சாரம்(நாகரீகம்) கி.மு.6000...

Wednesday, 24 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்.5---25/09/2014.

 திராவிடர்கள் : ஆரியர் வருகைக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த மக்களை  திராவிடர்கள் என்றே அழைக்கின்றனர். இவர்களுக்குள் இனக்குழு பிரிவுகள் தான் இருந்துள்ளன. சாதிய அமைப்பு ஏற்படுத்தப் படவில்லை. ஆதலால் குழுக் குழுவாக வாழ்ந்த இவர்களுக்கு பொதுத் தெய்வ வழிபாடுகள் இல்லை. பொது ஆட்சியமைப்பும் இல்லை. எனவே இயற்கையில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தனர். மாமிச உணவும் உண்டு. சைவ உணவும் உண்டு. தங்கள் இனக்குழுவிற்குள்ளேயே திருமணம் நிகழ்த்தப் பட்டதால் மற்ற குழுவுடன் தொடர்புகளும் இல்லாமல் வாழ்ந்துள்ளனர். தங்கள் கடவுள் வழிபாடுக்கு என்று தனி ஒரு இடத்தையும் தேர்வு...

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்- 4 --24/09/2014

இனக்குழு சமயத் தெய்வங்கள் ; இனக்குழு வாழ்க்கை என்பது சமயத் தோற்றங்க்ளுக்கு முன்னர் வாழ்ந்த அமைப்பாகும். ஆதலால் இங்கு தெய்வங்கள் என்பது இயற்கையில் உள்ள மரம்,மலை,விலங்கு,சில குறீயீடுகள், தாய் தெய்வங்கள்,மூதாதைகள் போன்று சில சிலைகளை உருவகப்படுத்தி  குறீயீடு வழிபாடுகளாக அமைக்கப்பட்டது. சமய நூல்கள் இருக்காது, மாறுபடக்கூடிய விதிகளே ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஆடல்,பாடல். கொண்டாட்டங்கள் என்று தெய்வீக வழிபாடுகள் இருக்கும். நிலையான குறீயீடுகள் தெய்வங்களாக இருப்பதில்லை.சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் குறியீடுகளும் மாறிக் கொண்டே இருக்கும். எனவே இனக்குழு மானுடம்...

Monday, 22 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்.-3

கடவுள்-தொடர்ச்சி. இயற்கையை வணங்கிய மானுடம், பின்னர் தனக்கு தீமையை கொடுக்கும் இயற்கை விளைவுகளையும் வழி படத் தொடங்கினர். அதனால் நில நடுக்கம்,புயல்காற்று,இடி,மின்னல்,பெருவெள்ளம்,நெருப்பு, போன்றவற்றை ஏற்படுத்தும் வானம்,நிலம்,காற்று,நீர்,நெருப்பு ஆகியவை கடவுளாக ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் மானுடத்திற்கு அச்சத்தை கொடுக்கும் அனைத்தும் கடவுளாக்கப்பட்டன. அதே போல் அச்சத்திலிருந்து காக்கும் அனைத்தும் கடவுளாக்கப்பட்டது. எ-கா. காட்டுப்பன்றி கடவுளாக்கப் பட்டது. அதை கொலை செய்யும் கூர்மையான ஆயுதமும் கடவுளாக்கப் பட்டது.( இதனடிப்படையிலேயே இன்று சைவ சமயத்தினரும்,வைணவ...

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்--2

பகுத்தறிவு ; மானுடத்தின் உச்ச பட்ச வக்கிரமான அனைத்து செயல்களுக்கும் காரணமாகத் திகழ்வது பகுத்தறிவே ஆகும். இப்பகுத்தறிவு இல்லாமல் இருந்தால் மற்ற விலங்கினங்கள் போல் ஒரே துன்பத்துடன்(பசி)வாழ்க்கை முடிந்திருக்கும். ஆனால் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட பகுத்தறிவு மானுடத்தை மீள முடியாத துன்பத்தில் சிக்க வைத்துவிட்டது.எதை பகுப்பது என்று புரியாமல் அனைத்தையும் பகுத்து விட்டார்கள். இப்பவும் பகுத்து கொண்டேயிருக்கிரார்கள்.          அச்சம்-துணிச்சல்/நல்லது-கெட்டது/துன்பம்-இன்பம்/கடவுள்-சாத்தான்/புனிதம்--தீட்டு/தலைவன் -தொண்டன்/உயர்வு-தாழ்வு...