VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Wednesday 31 December 2014

சோதிடத்தில் கோச்சாரப் பலன்கள் . 01-01-2015.

அன்புடையீர் வணக்கம்..மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில்                    மகிழ்ச்சியடைகிறேன்.



ஆரியர்களின் வருகை ;
இந்திய சோதிட வரலாறு ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன் வாழ்ந்த இந்திய மக்கள் சோதிடம் பார்க்கின்ற அறிவைப் பெறவில்லை. எனும்பொழுது, ஆரியர்களின் வருகை கி.மு.2000 என்று பொதுவாக வரலாற்று அறிஞர்களின் முடிவாக உள்ளது. 

இந்த ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த உடன் இங்கிருந்த இறைவழி பாட்டு அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். அதுவே இந்து சமய வேதங்களை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது. அந்த வேதங்களில் முதலாவதாக உள்ள இருக்கு வேதத்தில் உள்ள இறை வழிபாட்டு மந்திரங்களைக் கூறுவதற்கு சில நேரங்களைக் கடைபிடித்தனர். அவை முகூர்த்தம்,திதி, ருதுக்கள்,கிரகணம்,பொன்றவற்றை பயன் படுத்தியுள்ளனர். இவை அடிப்படை வானசாத்திர அறிவைக் கொண்டதாகும். இந்த அறிவை எங்கிருந்து பெற்றனர்…நிச்சயமாக இந்த அறிவு இந்தியர்களுக்கு இல்லை. பின் எங்கிருந்து வானசாத்திர அறிவைப் பெற்றனர்……………

உண்மையில் ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த குடியேற்றக் காரர்களாவர். அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியான குடிப்பெயர்ச்சியினால் ஐரோப்பாவிலிருந்து ஒவ்வொரு நதிசார்ந்த நாடுகளில் குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்ததில் மிகவும் முதன்மையானதாக இந்தோ-ஈரானிய கலாச்சாரத்தை எடுத்துக்கொள்ளலாம். தற்பொழுது உள்ள ஈராக்கின் பாக்தாத் நகரை மையமாகக் கொண்டு அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள நிலங்களை நாடுகளைக் கணக்கில் கொள்ளலாம். 

ஐரோப்பியர்கள்குடிபெயர்வதற்குமுன்னரேஇப்பகுதியில்சுமேரியர்கள், மெசபதோமியர்கள்,அக்கேடியன்கள், போன்ற இனத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் அடிப்படை வானசாத்திரத்தை அறிந்து வைத்துள்ளனர். பின்னர் வந்த ஐரோப்பியக்குடியேற்றக்காரர்கள் அவற்றை அறிந்துள்ளனர். பின்னர் அப்பகுதியில் வாழ்ந்த  அசீரியர்கள், பாபிலோனியர், சால்தியர்கள் போன்ரோர் வானசாத்திரத்தையும், அதன் மூலம் பலனாகக் கூறப்படும் கலைகளையும் அறிந்துள்ளனர்.

உலகின் எவருக்கும் இல்லாத சிறப்பு சால்தியர்களுக்கு உண்டு. இவர்கள் பாரசீக வளைகுடாப் பகுதியில்யூப்ரடீஸ், டைகிரீஸ் நதிகளின் முகத்துவாரத்தில் வாழ்ந்தவராவர். அதனால் வானத்தில் ஏற்படும் கோள்கள்,நட்சத்திரங்களின் மாற்றங்களை எளிதாக வெறும் கண்களைக் கொண்டு கணிக்கக் கூடியவர்களாக இருந்தனர்.அதனாலேயே தொடர்ச்சியான இரண்டாயிரம் ஆண்டுகள் வானத்தை ஆய்வு பல்வேறு முடிவுகளை அறிவித்துள்ளனர். அவர்களே சோதிட சாத்திரத்தின் முன்னோடிகளும் ஆவர்.

சோதிடத்தோற்றம்.
மிகவும் தெளிவாக கோள்களைக் குறித்து ஆய்வு செய்து அவற்றிற்கான பண்புகளை வெளியிட்டனர். பூமிக்கு வெளிவட்ட கோள்களான சனி,குரு,செவ்வாய், உள்வட்ட கோள்களான சூரியன், சுக்கிரன்,புதன். சந்திரன்,ஆகிய ஏழு கோள்களயும் கண்டுபிடித்து பலன்களைப் பார்த்தனர்.
சனி………………………………..துன்பம்
குரு………………………………..நன்மை
செவ்வாய்………………போர்குணம்
சூரியன்……………………..நிர்வாகம்
சுக்கிரன்………………….பெரும் விளைச்சல்
புதன் …………………………எழுத்து
சந்திரன்………………… வேளாண்மை.       ஆகிய அடிப்படை குணங்களைக் கொண்டு பலன்கள் பார்க்கப்பட்டன.

மேலே கூறப்பட்டுள்ள கோள்களின் வரிசைப்படி ஒரு நாளின் ஒவ்வொரு காலத்திற்கும் பலன்கள் பார்த்துள்ளனர். தற்பொழுது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோமே ஹோரா நேரம்  என்று. இதுவே சோதிடப்பலன்கள் பார்க்கப்பட்டதற்கு அடிப்படை நிலைகளாகும். இவற்றை ஏற்படுத்தியது சால்தியர்கள் ஆவர். பின்னர் படிப்படியாக இந்திய சோதிடத்திலும் இடம் பெற்றது.
சால்தியர்களின் சோதிடம், வானசாத்திரம் அக்கால வழக்கில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளது. 

அதனாலேயே புனிதர் இயேசு அவர்கள் பிறந்ததற்கு இவர்களே சாட்சி பகர்ந்ததாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. பழைய பைபிளில் பார்க்க வேண்டும். மத்தேயு;2-2.கிழக்கில் இருந்து வந்த சோதிடர்கள் சாட்சி கூறினர். பிறந்திருப்பது தேவகுமாரன் என்று எழுதப்பட்டிருக்கும். ஜெருசலத்திற்கு கிழக்கில் உள்ள நாடு சால்திய,பாபிலோனியாவாகும்.

எனவே முதலில் ஒவ்வொரு நேரங்களுக்குப் பிரித்து பலன் பார்க்கப்பட்டதிலிருந்து பலவேறு முறைகள் கண்டுபிடிக்கப் பட்டு சோதிடம்,,,, உலகம் முழுவதும் பரவியது. இவையெல்லாம் கி.மு2000திலிருந்து கி.மு 001வரைக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால்  கி.மு 2000ல் அங்கிருந்து இங்கு வந்த ஆரியர்கள் தொடக்கால வானசாத்திரத்தையும் அதற்குரிய பலன்களையுமே ஏற்படுத்தியுள்ளனர்.



கோச்சார கோள்களின் பலன்கள்;
இந்திய சோதிடத்தில் கோச்சாரக் கோள்களைக் கொண்டு பலன்கள் பார்க்கும் முறை தொடக்கதிலிருந்து வந்துள்ளது. முதன் முதலில் கோள்களின் கோச்சாரப் பலன்கள கிரகணத்திற்கே பார்க்கப்பட்டன. ஏனெனில் கிரகண காலத்தில் ஏற்படும் இயற்கை குழப்பங்களைக் கண்டு அஞ்சியாதால் கவனமாக கிரகண காலங்கள் கண்டு பிடிக்கப் பட்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டனர்.
அதன் பின்னர் ஒவ்வொரு கோள்களிற்கும் பண்புகள் கொடுக்கப்பட்டு பலன்கள் பார்க்கப்பட்டன.

பொதுவாக அக்காலங்களில் தனிமனித சாதகம் எழுதும் அளவிற்கு சோதிடசாத்திரம் வளரவில்லை.அதனால் தனிப்பட்ட மக்களுக்கு சோதிடப்பலன்கள் பார்க்கப் படவில்லை. ஆனால் ஒவ்வொரு அரச வம்சத்தினரும் தங்கள் குலத்திற்கு என்று ஒரு நட்சத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குல நட்சட்த்திரத்தில் நற்கோள்கள் வந்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று சோதிடவியல் பலனாகக் கூறப்பட்டது. அதேபோல் தங்கள் குலத்திற்கான நட்சத்திரத்தில் தீயகோள்கள் வந்தால் அந்த அரச குலத்தினர்க்கு தீய பலன்கள் நடைபெறும் என்று சோதிடப் பலனாகக் கூறப்பட்டது. இதுவே கோச்சாரப் பலன் பார்ப்பதற்குரிய முறையாக இருந்தது.

பின்னர் தனி மனிதன் பிறந்த நட்சத்திரம் கணிக்கத் தெரிந்த பிறகு அவருடைய நட்சத்திற்கு கோச்சாரக் கோள்களின் பெயர்ச்சிக்குரிய பலன்கள் பார்க்கப்பட்டன. {{{{{{சாதகங்கள் எழுதாத காலங்கள்.}}}}}}} ஆதலால் வெறும் கோச்சாரக் கோள்களைக் கொண்டே எதிர்காலப் பலன்கள் பார்க்கப் பட்டன.
பின்னர் இராசிமண்டலங்களைக் கொண்டு அவற்றில் கோள்கள் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்று சோதிடப்பலன்கள் கூரும் நூல்கள் உருவாக்கப்பட்டன.

இவற்றிலும் கோச்சாரப்பலன்கள் பார்க்கும் முறையின் வளர்ச்சியில் அஸ்டவர்க்கப்பலன்கள் கணிதங்கள் ஏற்படுத்தப் பட்டன. அவற்றைக் கொண்டு எதிர்காலப் பலன்கள் பார்க்கப்பட்டன. {அதாவது கோள்கள் அடுத்த இராசிக்கு செல்லும் வரை உள்ள நாட்களுக்குப் பலன்கள் பார்க்கப்பட்டன.}

இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலப் பலன்களைக் கூறும் சரியான தசா,புத்தி முறைகள் ஏற்படுதப்படவில்லை. அதனால் கோச்சார அடிப்படையில் எதிர்காலபலன்கள் பார்க்கப்பட்டன.

கோச்சாரப் பலன் கூறும் முறை வெறும் சந்திரன் ஒரு கோளை மட்டும் மையப்படுத்தி பார்க்கும் முறையாக மாறியுள்ளது. இக்கோச்சாரப் பலன்களில் மற்ற எந்த கோளும் இடம் பெறாது. தனி மனித சாதகமும் தேவையில்லை என்றாகிறது. எனும் பொழுது உலகில் உள்ள ஒரு இராசியில் சுமார் 65 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்குமான பலன்களாகும்` மிகவும் பொதுவானதும் அனைவருக்கும் பொருந்தாத பலன்களாக உருவாகும். எனவே தான் தனிமனித சாதகம் எழுதிய பின்னர் சந்த்ரன் ஒருவனை மட்டும் மையப்படுத்திக் கூறும் கோச்சாரப் பலன்கள் எந்த அளவு வேலை செய்கிறது என்று வினா எழுகிறது.    

உண்மையில் நன்கு சோதிடம் அறிந்த அன்பர்கள் ஒருவருடைய சாதகத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவிற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை கோச்சாரப் பலன்களிற்கு கொடுக்கமாட்டார். வேண்டுமானால் வாடிக்கையாளர் கேட்பதற்காக கூறலாமே தவிர அவரது மனசாட்சி இடம் கொடுக்காது.

எதிர்காலப் பலன்களை வரையறுப்பதில் 95 விழுக்காடு தனி மனித சாதகத்தின் கோள்களின் நிலைகளும்,தசா.புத்திகளுமே தீர்மானிக்கும். நிச்சயமாக கோச்சாரக் கோள்களின் {சந்திரன் மட்டும்} பலன்கள் சாதாரண நிலையிலேயே பலனளிக்கும்.


தனி மனித சாதகம் இல்லாமல் ,{ பிரஸ்னம் போன்ற }  பலன்கள் கூறும் முறையை நான் கூறவில்லை. ஏனெனில் அவை முழுவதுமாக சாதகம் எழுதி பார்க்கும் அமைப்பாகும்.


தற்பொழுது அருமையான கணிதங்கள் நம்மிடம் உள்ளன. அதைக்கொண்டு ஒரு சாதகரின் எதிர்காலப் பலன்களைத் தெளிவாக எடுத்துக் கூறமுடியும். இவற்றில் சந்திரனை மட்டும் மையப்படுத்தும் கோச்சாரப் பலனைக் கருத்தில் கொள்ளாமலே பலன்கள் கூறமுடியும். எனவே கோச்சாரப் பலன்களை சாதாரண நிலையிலேயே வைத்துக் கொண்டால் தேவையற்ற குழப்பங்களுக்கு வழி ஏற்படாது.


விம்சோத்தரி தசா அமைப்பில் ஒன்பது கோள்களும் பங்கு கொள்கின்றன. அவற்றின் கோச்சார நிலைகளைக் கொண்டு பலன்களைக் கூறலாமே தவிர தனிப்பட்ட சந்திரனை மட்டும் மையப்படுத்தும் பிறந்த இராசிப் பலன்களை சாதாரணமாகக் கொள்வோம்.    நன்றி..நன்றி….

MY BEST WISHES IN 2015 CHRISTIAN ERA…..

WITH REGARDS
PROFESSOR. DR. VIMALAN

01-01-2015..COIMBATORE.

Sunday 28 December 2014

தீய தோசங்களும் விலகாது----நல்லயோகங்களும் விலகாது.--28 / 12 / 2014.

அன்புடையீர் வணக்கம். எனது இணையதளத்தில் திரும்பவும் தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
சமீப நாட்களாக எனது பரிகாரத்திற்கு எதிரான கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிறது. அவற்றை விளக்கும் கடமையில் எனது முடிவுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சோதிடம் என்பது பல்வேறு அடிப்படை விதிகளை ஏற்படுத்தி எதிர்காலப் பலன்களை எடுத்துரைக்கும் கலையாகும். இவற்றில் தீய தோசங்களும். நல்ல யோகங்களும் பலன்களாகக் கூறப்படும்.
தீய தோசங்களை அனைத்துக் கோள்களும்,பன்னிருபாவகங்களும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதேபோல் நல்ல யோகங்களை அனைத்துக் கோள்களும், பன்னிருபாவகங்களும் ஏற்படுத்தும். இவையும் சோதிடப் பலன்கள் கூறுவதற்குரிய அடிப்படைக் கட்டமைப்பாகும்.

தீய தோசங்கள்.
சோதிடத்தில் உள்ள ஒன்பது கோள்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். இவற்றில் சூரியன்,செவ்வாய்,சனி,இராகு,கேது ஆகிய ஐந்து கோள்களும் இயற்கைத் தீய கோள்களாகும். 
சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கோள்களும்[ இவர்களுக்குள் இணைந்திருந்தால் நற்கோள்களாகும். குருக்கோளுடன் இணைந்தாலும் நல்லவர்கள் ஆவர். ஆனால் இயற்கைத் தீய கோள்களுடன் இணைந்தால் தீயவர்களாவர் } இருநிலைக் கோள்களாகும். 
குரு  ஒருவர் மட்டுமே இயற்கை நற்கோளாகும். 
எனவே சோதிடத்தில் தீய கோள்களின் ஆதிக்கமே கூடுதலாக இருக்கும். இவற்றைக்கொண்டு பன்னிரு பாவகத்தையும் இணைத்து பலநூறு தோசநிலைகளை உருவாக்கி அதற்குரிய பலன்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன.

இந்த தீய நிலைகளையே தோசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.     

நல்லயோகங்கள்;
தீய கோள்களும், தீயபாவங்களும் இணைந்து சில நல்ல யோகங்களை ஏற்படுத்தியுள்ளனர். தீயகோள்களும், நல்லபாவகங்களும் இணைத்து நல்லயோகங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
 அதேபோல் நற்கோள்களும் ,நல்லபாவகங்களையும், --நற்கோள்கள்,தீயபாவகங்களையும்,இணைத்து நல்லயோகப்பலன்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
தீயகோளும்,நற்கோளும் இணைந்து நல்லபாவகத்தில் இருந்தும்---தீயகோளும்,நற்கோளும் இணைந்து தீயபாவகத்திலிருந்தும் நல்ல யோகப்பலன்களை ஏற்படுத்தியுள்ளனர். 
இவ்வாறு அடிப்படை விதிகளை உடைக்காமல் சோதிட சாத்திரத்தில் பல்வேறு நல்ல யோகங்களும், தீய தோசங்களும் எழுதப்பட்டுள்ளன.

பலன்களின் நிலை;
இந்த நல்லயோகங்களூம், தீயதோசங்களும் ஒருவருடைய சாதகத்தின் எதிர்காலப் பலன்களைத் தீர்மானிப்பதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இதில் ஒருவருடைய சாதகத்தில் நல்ல யோகங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு கூடுதலாகவும், தோசங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு குறைவாகவும் இருந்தால், அச்சாதகம் நல்ல யோகமான சாதகமாகும். ------------------
அதேபோல் நல்ல யோகங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு குறைவாகவும், தோசங்களைக் கூறும் கோள்கள் அமைப்பு கூடுதலாகவும் இருந்தால், அச்சாதகம் தோசசாதகமாகும்.

எனவே ஒரு சாதகம் நல்ல யோகங்களுடனும் ,தோசங்களுடன் தான் பிறக்கின்றன. இதனால் தோசமில்லாத சாதகம் உலகில் இல்லை. அதேபோல் நல்ல யோகமில்லாத சாதகமும் இல்லை.

இந்த தோசங்களும், நல்லயோகங்களும் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். இவை எப்பொழுது பெரிதாக வெளிப்படும் என்ற வினா எழுகிறது. அனைத்து செயல்களும் பிறந்ததிலிருந்து தொடங்குகிற தாசா.புத்திகள்,அந்திர,சித்திர,சூட்சும,பிராணங்கள் தீர்மாணிக்கின்றன. இத்தசா,புத்திகள்.பன்னிருபாவங்களுடன் செயல் படும் பொழுது அவற்றிக்கு ஏற்றவாறு கூடுதலாகவோ அல்லது குறைவாக வெளிப்படுகிறது.
இச்செயல்களில் நல்லயோகங்கள் எவ்வாறு நற்பலன்களை வழங்குகிறதோ ,அதேபோல் தீயநிலைகள் தீய பலன்களை வழங்கும். இதுவே சோதிடத்தின் நிலையாகும்.

இவற்றில் தீயபலன்களைக் குறைப்பதற்கு பரிகாரச்செயல்கள் செய்தால் சரியாகிவிடும் என்றால் ,நற்பலன்களைக் குறைப்பதற்கு ஏதாவது பரிகாரச் செயல்கள் கூறப்படவேண்டும் . அப்படியெல்லாம் இல்லை.
சோதிடம் பலன்களைக் கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறது. அதற்கு மாற்றாக பரிகாரத்தை கூறினால் முன்னர் கூறிய சோதிடப்பலன்கள் பொய்யாகிவிடும். எப்பொழுதும் சோதிடம் பொய்யுரைப்பதில்லை. எதிர்காலத்தில் எது நடக்குமோ அதை தெளிவாகவே கூறுகிறது.   எனவே பரிகாரத்தை கூறினால் சோதிடப்பலன்கள் பொய்யாகிவிடும். பரிகாரம் இல்லையென்றால் சோதிடப்பலன்கள் உண்மையாகும்.   

பரிகாரம் என்பதெல்லாம் உலகச்சமயங்களின் இன்றியமையாத செயல்களாகும்.  எப்பொழுதும் மானுடம் பாவம் செய்து கொண்டேயிருக்கின்றன. அப்பாவங்களைப் போக்கும் அமைப்பில் இறை வழிபாடுகளைச் செய்யச் சொல்லி மானுடத்தை வாழ்வியல் பற்றுடன் செயல்பட வழிசெய்கிறது. நம்பிக்கை அடிப்படையானது.

ஆனால் சோதிடம் பாவத்தை போக்கும் வழிசொல்லும் கலையில்லை. இவை ஒருவர் பாவம் செய்வார்,அல்லது நல்லது செய்வார் என்று மட்டும் தான் கூறுகிறது. அதேபோல் நல்லது நடக்கும் அல்லது தீயது நடக்கும் என்று கூறுகிறது.வேறு ஒன்றும் சொல்லவில்லை. 

மாறாக பரிகாரத்தை சோதிடம் கூறுகிறது என்றால், அக்கூற்று அனைத்தும் சோதிடத்தை பொய்யாக்குவதாகும். எனவே சோதிடம் எதிர்காலத்தை உரைப்பதால் இங்கு பரிகாரத்திற்கு வேலையில்லை.
எந்தப் பரிகாரத்தினாலும் தோசங்களைக் குறைக்க முடியாது. தோசங்கள் அனைத்தும் அனுபவித்து முடிக்க வேண்டியதாகும்.

அனைத்து பலன்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதே சோதிடத்தின் கடமையாகும். [ ALL ACCEPTANCE ]

நல்ல யோகங்களை எப்படி விலக்க முடியாதோ ,அதேபோல் தீய தோசங்களையும் விலக்க முடியாது………..


மிக்க நன்றி…………………….PROFESSOR. VIMALAN.    28-12-2015.

Friday 12 December 2014

வேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.

வேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை.

இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற்றி அக்னி சாட்சியாகச் செய்யப்படுவதாகும். இவற்றிற்கு பொதுவான காலங்களூம், குறிப்பிட்ட முகூர்த்தகாலங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டு வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டன.
பொதுவாக அனைத்து வழிபாடுகளும் பகலில் சூரிய உதயத்திலிருந்து, நடுப்பகலிற்குள் செய்யப்படவேண்டும். இது பொதுவிதியாகும்( உண்மையில் பிரம்ம முகூர்த்தம் என்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் செய்யப் படும் சடங்குகள் முகூர்த்த சாத்திரத்தில் கூறப்படவில்லை.). வேதகாலத்தைப் பொறுத்தவரை பகலிலேயே சடங்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடக்கத்தில் திதியை (திதி என்பதே தற்காலத்தில் தேதி என்று மாறியுள்ளது.) கொண்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தன. பின்னர் கால வளர்ச்சியினால் முகூர்த்தங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அதன் வழியாக சடங்குகள்,வழிபாடுகள் நிறை வேற்றப்பட்டன.
வேதகால முகூர்த்தப் பெயர்கள்:

பகலிறவு கொண்ட ஒரு நாளுக்கு முப்பது முகூர்த்தங்கள் ஏற்படுத்தப் பட்டன. இவற்றில் வளர்பிறை பதினைந்து நாட்களுக்கு தனியாகவும், தேய்பிறை பதினைந்து நாட்களுக்கு தனியாகவும் முகூர்த்தங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

வளர்பிறை முகூர்த்தப் பெயர்கள்      தேய்பிறை முகூர்த்தப்பெயர்கள்
பகல் --------        இரவு                      பகல் ----------- இரவு             
சித்ர             தாதா                 சவிதா             அபிசாஸ்தா
ஹேது           ப்ரதாதா              ப்ரசவிதா           அனுமந்தா
பிரபான்          அனந்த               தீப்த               அனந்த
அபான்             மோத                திபயன்             மோத
ஸம்பான்           ப்ரமோத             திப்யமான          ப்ரமோத
ஜ்யோதிஸ்மான்    அவெஸன்           ஜ்வலன்           அஸாதயன்
தேஜஸ்வான்       நிவெஸயன்         ஜ்வலிதா           நிசாதயன்
அதபான்            ஸம்வெஸன்        தபான்            ஸம்ஸாதன்
தபான்              ஸம்ஸன்தா        விதபன்           ஸம்ஸன்னா
நபிதபான்           ஸன்தா             ஸன்தபன்          ஸன்னா
ரோகன             அபவன்              ரோகன            அபூ
ரோகமான          பிரபவன்            ரோகமான           விபூ
சோபன            ஸம்பவன்           ஸம்பூ               ப்ரபூ
சோபமான         ஸம்பூத              சும்பமான           ஸம்பூ
கல்யாண          பூத                  வாம                புவ.

 ஆகியவை வேதகால முகூர்த்தப் பெயர்களாகும்.

வேத காலத்தில் இராசிகள், பாவகங்கள் கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆதலால் ஒரு நாளினை முப்பது பிரிவாக பிரித்து காலத்தை கணித்துள்ளனர். தற்பொழுது கணிக்கப்படும் நாழிகை, மணிகள் எல்லாம் அப்பொழுது இல்லை. அப்பொழுது காலத்தைகுறிக்கும் சொல்லாக முகூர்த்தம் என்றுள்ளது. இவற்றில் நல்லமுகூர்த்தகாலமென்றும் ,தீய முகூர்த்தகாலமென்றும் பிரித்து பார்த்து செயல்களைச் செய்துள்ளனர். 

தற்காலக் கணிதப்படி வேதகால முகூர்த்த காலத்தின் அளவு நாற்பத்துயெட்டு நிமிடங்களாகும்.(இரண்டு நாழிகைகளாகும்.) மேலே குறிப்பிடப்பட்டுள்ள முப்பது முகூர்த்தப்பெயர்களில் நல்ல முகூர்த்தங்களும், தீய முகூர்த்தங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த முகூர்த்தம் பார்க்கும் அமைப்பு வேதகாலத்திற்குப் பின்னர், இதிகாசம்,புராணகாலம்,கிருஹ்ய ஸூத்ரகாலங்களிலும், மனு ஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி காலங்களிலும் பயன் படுத்தப்பட்டுள்ளன. பின்னர் இராசிகளும்,பாவகங்களும் கண்டுபிடிக்கப்பட்டபின், இப்பெயருடன் கூடிய முகூர்த்த காலங்கள் கைவிடப்பட்டன.

தற்கால முகூர்த்தங்கள்

தற்கால முகூர்த்தம் என்பது ஏறத்தாழ 1000 ஆண்டுகள் வளர்ச்சியாகும். முகூர்த்தவிதிகளில் கூறப்பட்டுள்ளபடி ஒரு நல்ல காலத்தை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் அரிதானதாகும். எண்ணிலடங்காத முகூர்த்த விதிகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் குறிப்பிட்டால் பல நூல்கள் எழுத வேண்டியது இருக்கும். இருப்பினும் முகூர்த்த விதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உரிய சில காரணிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.

திதி. நட்சத்திரம், வாரம், யோகம்,கரணம்,அமிர்தாதி யோகங்கள்,இலக்னம், பாவகம்,கோள்கள்நிலை,தியாஜ்யங்கள்,நேத்திரம்,ஜீவன்,வாரசூலை,யொகினி, தனியநாள்,கரிநாள்,இலத்தை,திரிதினஸ்பிர்க்கு,அவமாகம்,மேல்நோக்குநாட்கள்.கீழ்நோக்கு நாட்கள்,சம நோக்குநாட்கள்,இராகுகாலம்,எமகண்டம், கௌரி பஞ்சாங்கம்,பஞ்சகம்,போன்றவை தற்போது பயன்படுத்துவதாகும். 

பயன்படுத்தாத முகூர்த்தவிதிகள் நூற்றுக்கணக்கில் நூல்களில் உள்ளன.அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் ஒரு முகூர்த்த நேரத்தை தேர்ந்தெடுப்பது என்பது இயலாத செயலாகும்.
எனவே மேலே குறிப்பிடப்பட்ட விதிகளில் முதன்மையானவற்றை தேர்ந்தெடுத்து செயல்களைச் செய்யலாம்.

முகூர்த்தநேரம் என்பது குறிப்பிட்ட செயலிற்கு இடையூறு வருவதை தடுக்குமே தவிர, செயலின் எதிர்காலத்தன்மையை வெளிப்படுத்தாது.

அனைத்து எதிர்காலப் பலன்களும் அவரவரின் சாதகப்படியே நடைபெரும்.              

மிக்க நன்றி.

Professor. Dr.T.Vimalan.   12-12-2014.


Friday 5 December 2014

தமிழகப் பல்கலைக் கழகங்களில் சோதிடவியல் துறை. சிறு விளக்கம்.

அன்புடையீர் வணக்கம். திரும்பவும் உங்கள் அனைவரையும்  சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
 தமிழகப் பல்கலைக் கழக சோதிடவியல் துறை  வரலாறு என்பது கி.பி 2002 ல் இருந்து தொடங்குகிறது. கி.பி.2001ல் இந்திய வரலாற்றில் சோதிடத்திற்கு என்று பல்கலைக் கழக மானியக்குழு ஒரு சிறப்பான முடிவைஎடுத்தது. என்னவெனில் இந்தியப் பல்கலை கழகங்களில் சோதிடவியல்பாடமாக வைக்கப்பட்டு சோதிடவியல்துறை தொடங்க ஆணையிடப்பட்டது. பதினாறு பல்கலைக்கழகங்களுக்கு மானியமாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்சம்) வழங்கப் பட்டது. ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர், இரண்டு விரிவுரையாளர்கள், இரண்டு அலுவலக உதவியாளர்கள் நியமித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அவர்களுக்குரிய சம்பளம் பல்கலைக்கழக மானியக்குழுவே கொடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் தமிழகத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு மானியம் வழங்கியது என்பது எனக்குத்தெரிந்த தகவலாகும். ஒன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.மற்றொன்று தஞ்சை சாஸ்த்ராப் பல்கலைக் கழகமாகும். 
இவற்றில் தஞ்சை ஸாஸ்த்ராப் பல்கலைக் கழகமே சோதிடவியல் துறையைத் தொடங்கியது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தனக்கு சோதிடவியல் துறைத் தேவையில்லை என்று மானியக்குழு கொடுத்த பணத்தை திருப்பியனுப்பியதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

கி.பி 2002ல் தஞ்சை சாஸ்த்ராப் பல்கலைக்கழக துணைவேந்தர் மாண்புமிகு. ரா. சேதுராமன் அவர்களின் ஆணைப்படி சோதிடவியல் துறைக்கு திரு தி. விமலனாகிய எனக்கு விரிவுரையாளர் பதவி கொடுத்து பாடப்பிரிவுகளைத் தொடங்கச் செய்தார். அந்த நாள் தமிழக சோதிடவியல்துறை வரலாற்றிலும் எனது வாழ்விலும் அழியாத புகழை ஏற்படுத்தியதாகும். சோதிடவியல் துறையின் முதன் முதலில் ஊழியம் பெற்றவனாக பாக்கியம் பெற்றேன். அங்குதான் உலகத்திலேயே மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை சோதிடவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. அதை நடத்துவதற்கு வாய்ப்பளித்த ஸாஸ்த்ராப் பல்கலைக்கழகத்தினர்க்கு என்றென்றும் நன்றியுடையவனாவேன்.

இதே 2002ல் ஆந்திரா பொட்டி ஸிரி ராமுழு பல்கலைக் கழகத்தில் முதுகலை சோதிடவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது.

2007ல் தஞ்சை சாஸ்த்ராப்பல்கலையில் முதுகலை சோதிடவியல் பாடப்பிரிவும் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

பின்னர் 2009ல் கோவை கற்பகம் பல்கலைக் கழகத்திற்கு சோதிடவியல் துறையை ஏற்படுத்தி முதன் முதலில் அறிவியல் ரீதியான பட்டப்படிப்புகளை தொடங்கினேன். கற்பகம் பல்கலைக் கழகத்தின் வேந்தர் மாண்புமிகு டாக்டர். வசந்த குமார் ஐய்யாவின் உத்தரவின் பெயரில் எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. Diploma, B.A., B.Sc., M.A., M.Sc. ,M.Phil., Ph.D. போன்ற அனைத்து பாடப்பிரிவுகளிலும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இச்சோதிடவியல் துறைக்கு பேராசிரியராகவும், இயக்குனராகவும், தலைவராகவும் செயலாற்ற வாய்ப்பளித்த கற்பகம் பல்கலைக் கழகத்தினர்க்கு நன்றி உடையவனாகிறேன்.

ஏறத்தாழ 5000 நபர்கள் இதுவரை பட்டம் பெற்றிருப்பார்கள். இவை தவிர மற்ற பல்கலையில் எவ்வாறு சோதிடவியல்துறை இயங்குகிறது என்று எனக்கு தெரியவில்லை. இதுவே சோதிடவியல் துறையின் சுருக்கமான வரலாறாகும்.


( ஒரு சிலர் மதுரை காமராசர் பல்கலையில் சோதிடவியல் துறை இருந்ததாக கூறுவதாக கேள்விப்பட்டேன். அப்படியெல்லாம் ஒரு அதிர்ஸ்டம் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. அங்கு சோதிடவியல் துறையும் இல்லை.  சோதிடவியல் பேராசிரியர் என்று எவரும் இருந்ததில்லை. அங்கு இருந்தது சாதாரண டிப்ளமோ பாடப்பிரிவு ஆகும். அதுவும் தொலை நிலைக்கல்வியில் ஓராண்டு படிப்பாகும்.  தமிழகத்தில் உள்ள 20 நபர்கள் இப்பாடப்பிரிவை நடத்தியுள்ளனர். அதில் நானும் ஒருவனாவேன். எங்கள் அனைவருக்கும் பத்துமணி நேர வகுப்பிற்குரிய பணம் மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு எங்களுக்கும் பல்கலைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. எங்களைப்போலவே பல்கலையில் வெவ்வேறு துறையில் பணி செய்த ஊழியர்களும் பாடம் எடுத்துள்ளனர். நான் 1993/1994ல் டிப்ளோமோ படிப்பிற்கு தேர்வு எழுதத்தான் சென்றேன். ஏனெனில் மூன்று பாடங்களும் அடிப்படை சார்ந்ததாகும். வேறு எவரையும் அப்பொழுது தெரியாது. பின்னர் 1996ல் இப்பாடப்பிரிவை சோதிடம் தெரிந்தவர்கள் பாடம் எடுக்கலாம் என்று அறிந்து வாய்ப்பு கேட்பதற்கு சென்றேன்.
 அப்பொழுது அங்கு பல்கலை அலுவலராகப் பணியாற்றிய திரு. மாரிமுத்து( Non-Teaching staff) என்பவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் கேட்டபொழுது வடமொழித்துறை பேராசிரியர் டாக்டர், வீர ராகவன் அவர்களை பார்க்கச்சொன்னார். திருவீரராகவன் அவர்களைப் பார்த்தபின்னரே பல செய்திகள் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது. 
முதலில் சோதிடவியல் துறை என்று ஒன்று இல்லை என்பது புரிந்தது. பின்னர் பாடம் எடுக்க அனுமதிக்கப்பட்டேன். இதை பெருமையாகக் கூற முடியவில்லை. ஏனெனில் வெறும் டிப்ளோமோ பாடத்திட்டத்தை எந்த பிரிவிலும் தொடங்கலாம் என்றும் அதற்கு துறை என்று ஒன்று தேவையில்லை என்பதும் அறிந்து கொண்டேன். இப்பாடத்தைப் படிப்பதால் எதிர்காலத்தில் என்ன பயன் ஏற்படப்போகிறது என்ற ஐயமும் இருந்தது. சோதிடவியல் படிப்பதற்கு மாணவர்கள் அதிகம் வந்தாலும், எங்களை, மற்ற துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் கண்டு கொள்வதேயில்லை. அவர்கள் கொடுக்கும் பணம் பற்றாக்குறை தான் இருப்பினும் பாடம் எடுத்தோம் . 
மொத்தம் ஐந்து ஊர்கள், ஒரு ஊருக்கு மூன்று சனி,ஞாயிறு. ஆக ஒரு ஆண்டிற்கு  ஐந்து ஊர்களில் 30 நாட்கள் மட்டும் வகுப்புகள் எடுப்போம். மற்ற நாட்களில் எங்களது வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். மற்ற செய்திகள் பதிய முடியவில்லை. நன்றி.) நிறையக் கூறலாம். தேவையில்லை என்று முடிக்கிறேன்.

குறிப்பு: எனது மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! என்னை விமர்சனம் செய்ய வேண்டாம். உங்களைப் பற்றியும் உங்கள் திறமைகளைப்பற்றியும் மற்றவர்களைவிட எனக்கு நன்கு தெரியும். உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள். எனது பணியை நான் செய்கிறேன். நான் உங்களுக்கு கற்றுக்கொடுத்த ஒரு சிறு பகுதியை பொது மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் சோதிடம் என்ற கடல் குப்பைகளால் சூழப்பட்டு மக்களை ஏமாற்றும் கலையாகமாறி வருகிறது. அதில் கொஞ்சமேனும் வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்னால் முடிந்த அளவிற்கு சாதித்துள்ளேன். இனியும் சாதிப்பேன். உங்களால் முடிந்ததை சாதித்துக்கொள்ளுங்கள். ஒரு மாணவரிடம் எதுசரி,எதுதவறு என்று கேட்கும் நிலையில் நான் இல்லை. எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் ஏதாவது உருப்படியாகச் செய்யப்பாருங்கள். நன்றி.               
 Professor.Vimalan.