Friday 13 February 2015

பழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015


பழமொழிகளும் -----   சோதிடமும்

அன்பானவர்களே !!!!!! திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்….

சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி பல மனிதர்களின் நம்பிக்கைகளை தகர்ப்பதை இன்றும் காணமுடிகிறது…. பழமொழிக்கும் சோதிடத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்படியிருக்க எப்படி சோதிடத்தில் பழமொழிகள் வந்திருக்கும் என்ற வினா எழுகிறது அல்லவா!!!!. இதை ஆய்வுக்கு உட்படுத்தினால் பல உண்மைகள் ஆய்வரங்கத்திற்குள் வந்து விடும்.. ..அதையும் வரவேற்போம்….

” ஜென்ம குரு வன வாசம்”  என்று ஒரு பழமொழி……… உள்ளது….

அதாவது பிறக்கும் பொழுதோ அல்லது கோச்சாரத்தில் ஒருவருடைய இராசிக்கு குரு மாறிவந்தால்,,அந்த இராசிக்காரக்கு நிலையற்ற தன்மை ஏற்பட்டு துன்பப்படுவார் என்ற கருத்தில் கூறப் படுவதாகும்… இக்கருத்து உண்மையில் சரிதானா??? 

 இராமாயணத்தில் இராமருக்கு சாதகக் கட்டம் போட்டு கோள்களின் நிலைகளைக் குறித்து உள்ளார்கள். அதில் இராமரின் இராசி கடகம் என்றும் அதில் கூடவே குருக் கோள் உச்ச நிலையில் இணைந்திருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கும். பிறக்கும் பொழுது அச்சாதகத்தில் குரு இணைந்திருப்பதைக் கொண்டு அவர் வனவாசத்தில் துன்பப்பட்டதை வைத்து பழமொழி கூறியிருக்கலாம்……அல்லது இராமாயணக் கதையின் படி இராமர் பிறந்து பன்னிரெண்டு வயதில் அரக்கியை அழிக்க வனத்திற்கு செல்கிறார்..அப்பொழுது ஒரு வனவாசம் நடைபெறுகிறது..அரக்கியை அழித்தவுடன் இராமருக்கு திருமணமும் நடைபெற்று மனைவியுடன் அரண்மனை திரும்புகிறார்.. அச்சமயத்தில் கோச்சாரக்க்குரு கடகத்தில் இருக்கும். அதற்காகக் கூறலாம்….

பின்னர் பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் கதைப்படி இராமரின் வயது 24 ல் மனைவியுடன் வனவாசம் செல்கிறார்.. இப்பொழுதும் கோச்சாரக் குரு கடக இராசியில் இருந்திருப்பார். அதைக்கொண்டும் பழமொழி கூறியிருக்கலாம். ஆனால் நான் இராமரின் வயதை வைத்துக் கூறியது எத்தனை நபர்களுக்குத் தெரிந்திருக்கும் என்று தெரிய வில்லை…இருப்பினும் இந்த பழமொழியை தோற்றுவித்த சோதிடர்க்கு தெரிந்திருக்குமா என்றும் கருத முடியவில்லை….

எப்படியிருப்பினும் இந்த பழமொழி தவறானதாகும்…….. இராமருடன் மற்ற மூவரும் இதே இராசியில் பிறந்துள்ளனர்…. வால்மீகி இராமயணப்படி பரதன் பூசம் நட்சத்திரத்திலும்,,,இலக்குவனும்,சத்ருக்கனும், ஆயில்ய நட்சத்திரத்திலும் பிறந்துள்ளனர். எனும் பொழுது இராமரும், இலக்குவனும் வனத்திற்கு செல்ல ,,,,,,பரதனும் ,சத்ருக்கனும் நகரத்திலேயே வாழ்ந்துள்ளனர். எனும் பொழுது ஜென்ம குரு வனவாசம் என்பது இங்கு அனைவருக்கும் நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது… எனவே ஒரு இராசியை வைத்துக்கூறும் பழமொழிகள் அனைவருக்கும் தீமையோ அல்லது நற்பலன்களோ ஏற்பட வாய்பில்லை..அவை பொதுவான பழமொழிகளே தவிர வேறொன்றுமில்லை….

” சித்திரை அப்பன் தெருவிலே “ இப்படியும் ஒரு பழமொழி உள்ளது…..


இதுவும் இராமாயணக் கதையைக் கொண்டு ஏற்படுத்தப் பட்டதாகும்…. அதாவது இராமர் பிறந்தது சித்திரை மாதமாகும்.  இராமர் வனத்திற்கு சென்ற பின்பு மயக்கம் தெளிந்து எழுந்த அவருடைய தந்தை தசரதன் இராமா ,இராமா,என்று கதறிக் கொண்டே அரண்மனைத்தெருவில் வந்து உயிர் விட்டதாக கதை சொல்கிறது. இதன் அடிப்படையில் ஏற்படுத்தப் பட்ட பழமொழியாகும்.. இதுவும் தவறானதாகும்.. சித்திரை என்கிற மாதத்தில் உலகத்தில் உள்ள பன்னிரெண்டில் ஒரு பங்கினர் பிறந்துள்ளனர். அவர்களுடைய தந்தையெல்லாம் இந்த துன்பமா அனுபவிக்கின்றனர்….

அக்காலங்களில்சித்திரையின்கொடியவெயிலில்குழந்தைபிறந்தால்,தாயிற்கும், குழந்தைக்கும் ஆகாது என்று பிறப்பையே தள்ளி வைத்தனர்.. இந்த கருத்தின் அடிப்படையில் கூறினாலும் …தந்தைக்கு எப்படி தீங்கைக்கூறுவது,,,,, எனவே இந்த பழமொழியும் தவறானதாகும்……

 “பூராடம் நூலாடாது “  பாவம் இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு தாலிக்கயிறு நிலைக்காது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்ட பழமொழியாகும்… 


இப்பேர்பட்ட வக்ர புத்தியுள்ள சோதிடப் பழமொழிகளால் சோதிடத்திற்கு தான் கேடு… பொதுவாக ஒரு நட்சத்திரத்தில் எத்தனையோ கோடிக்கணக்கில் பெண்கள் பிறந்துள்ளனர்… அவர்களை பழமொழியால் பழிப்பது எத்தனை பெரிய பொய்யாகும்… என்னமோ பூராடத்திற்கு மட்டும் கணவர் இறப்பாராம்.. மற்ற நட்சத்திரப் பெண்களெல்லாம் ,,அப்படியே கணவருடன் வாழ்வது மாதிரியாக அல்லவா உள்ளது….
உண்மையில் இவ்வாறு பொய்யான பழமொழிகளுடன் கூடிய சோதிடங்களையும், சோதிடர்களையும் தவிர்க்க வேண்டும்…..

”அவிட்டம் நட்சத்திரம் தவிட்டுப் பானையெல்லாம் தங்கம்”


வறுமைக் கோட்டில் வாழும் அவிட்ட நட்சத்திரங்களை என்ன செய்வது . பொதுவாக பல இலட்சம் மக்கள் ஒரு நட்சத்திரத்தில் பிறக்கின்றனர்…எனும் பொழுது அவர்கள் அனைவரும் ஒன்று போல் வாழ்வது இல்லை. எனவே இந்தக் கூற்றையும் எப்படி ஏற்றுக்கொள்வது…..

”பரணி தரணி ஆளும்”

எத்தனையோ பரணிகள் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றன… அதாவது வறுமைக்கோட்டிற்கும் கீழே வாழ்கின்றனர்……..


” வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை வீட்டிற்கு ஆகாது..


வாரத்திற்கு மொத்தமே ஏழு நாட்கள் தான்… வெள்ளிக்கிழமையில் மட்டும் ஏறத்தாழ 50 கோடி ஆண்கள்  பிறந்து உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்…. இவர்களை எல்லாம் என்ன செய்வது……..

”உத்திரத்தில் ஒரு பிள்ளை ஊர் கோடியில் ஒரு காணி நிலம்”

உத்திர நட்சத்திரத்திற்கு ஒரு சிறப்பு பலன் கூறியுள்ளார்கள்… இதுவும் இராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டதாகும்.. இராமர்- போருக்கு செல்வதற்கு தனது பிறந்த நட்சத்திரமான புனர்வசுவில் இருந்து ஆறாவது நட்சத்திரமான உத்திரத்தை தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகிறார். எனவே இதன் அடிப்படையில் கூறப்பட்ட பழமொழியாகும்… ஆனால் இங்கு பிறந்தவர்களுக்கு நல்லது என்று உள்ளது…

இவை போல் சோதிடத்தில் புராணக்கதைகளின் அடிப்படையில் பொதுவான பலன்களுடன் கூடிய  பழமொழி சோதிடப்பலன்கள் அங்கங்கு கூறப்படுகின்றன.. இவற்றிற்கும் மானுட வாழ்விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.. ஆனால் பிறந்த சாதகத்திற்கும் மானுட வாழ்விற்கும் அதிக தொடர்புகள் உள்ளன. எனவே பொது மக்கள் சோதிடப் பழமொழிகளை நம்பாமல் , அனைத்துப் பலன்களையும் சாதக ரீதியாக கேட்டுக் கொள்ள வேண்டும்.. பழமொழிகளைக் கூறி பயமுறுத்தும் சோதிடரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்…

குறிப்பு : உண்மையைக் கூறுவதற்கு யாரும் முன் வராததால் நாங்கள் கூறிக் கொண்டிருக்கிறோம்… தமிழக சோதிட உலகில் நாங்களாவது இப்படி இருந்து விட்டுப் போகிறோமே …… அதில் உங்களுக்கு என்ன வருத்தம்…
முடிந்தால் எங்களுடன் சேர்ந்து நீங்களும் எழுதுங்கள்.. வரவேற்கிறோம்…..

மிக்க நன்றி…..

Professor . Vimalan.       13-02-2015.