Saturday 21 March 2015

காலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / 03 / 2015.


காலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே…….

அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் பெறு மகிழ்ச்சியடைகிறேன்……

காலசர்ப்ப தோசம் அல்லது யோகம் என்று சமீபகாலமாக மக்களை அச்சுறுத்தி பரிகாரங்களையும், பலன்களையும் கூறிவருகின்றனர்..இச்செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்………இந்த அச்சுறுத்தும் யோகம், தோசத்திற்கு அடிப்படையான கோள்கள் இராகு , கேதுவை பற்றி விவாதிப்போம்.

இராகு;  

சோதிட சாத்திரத்தில் இராகுவை ஒரு கோளாக பார்ப்பது கி.பி 10 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன் இராகு என்பது கிரகணம் ஆகும். இராகு என்றால் கிரகணம் என்ற கூற்றும் உள்ளது. வால்மீகி எழுதிய இராமாயணத்தில் இராகு என்ற சொல் முழுவதும் கிரகணத்தைக் குறிக்கும் சொல்லாகவே எழுதப்பட்டுள்ளது…..அங்கு இராகு என்பது ஒருகோள் என்று எங்கும் எழுதப்படவில்லை. வராகமிகிரர், கல்யாணவர்மர்,ஸிரிபதி.போன்ற சோதிடர்கள் தங்கள் நூற்களில் இராகு,கேதுவை கோள்களாக குறிப்பிடவில்லை. பின்னர் வந்த சோதிடர்கள் இராகுவையும் கேதுவையு கோள்களாக்கி அவற்றுக்கும் பலன்களை கூறியுள்ளனர்.. 

வராகமிகிரர் தனது ‘பிருகத்சம்கிதா’ என்ற நூலில் பகுதி 5ல் இராகு என்ற தலைப்பில் கிரகணம் பற்றியும் அவை ஏற்படும் இராசிகளை கணக்கில் கொண்டு எந்தெந்த நாட்டிற்கு தீமைகள்,நன்மைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்..இதில் இராகுவை பாம்பின் தலை என்றும், அதன் 180 பாகையை பாம்பின் வால் என்றும் குறிப்பிடுகிறார்…..கேது என்று கிரகணத்தை வராகமிகிரர் குறிப்பிடவில்லை…..

கேது;

கேது என்ற வார்த்தைக்கு சரியான வடமொழி பெயர் புகையாகும்….வானத்தில் தென்படும் வால்நட்சத்திரங்களே கேது (comet) என்று அழைக்கப்பட்டுள்ளன…கேது என்ற கோளை பழைய சோதிட அறிஞர்கள் எவரும் தங்களது நூலில் குறிப்பிடவேயில்லை…..வராகமிகிரரின்,  “பிருகத் சம்கிதாவில்” பகுதி 11 ல் On Comets என்ற தலைப்பில் வால்நட்சத்திரங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்…அந்த வால் நட்சத்திரங்களை கேது என்றே குறிப்பிடுகிறார். வால் நட்சத்திரங்கள் தோற்றத்தில் நீண்ட வாலுடைய புகை போல் தெரிந்ததால் இவ்வாறு குறிப்பிடுகிறார். இந்த வால் நட்சத்திரம் தெரிந்ததால் உலகிற்கு நல்லது இல்லை என்றும் பலன்களாக உள்ளன…. 

எனவே கோள்களைக் கண்டுபிடித்த காலத்திலிருந்து இராகு,கேதுக்கள் என்ற கோள்கள் உருவாக்கப்படவில்லை……..கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் கிரகணப் புள்ளிகளை கோள் களாக உருவாக்கி பலன்களும் கூறிவருகிறோம்…இதனாலேயே பல அறிஞர்கள் வானத்தில் இல்லாத ஒன்றை கோள்களாக்கி அதற்கும் பலன்கள் கூறி ஏமாற்றுகின்றனர் என்று நம்மை வசை பாடுபவர்களும் உண்டு.

காலசர்ப்பதோசம் / யோகம்;

ஒருவருடைய சாதகத்தில் குறிக்கபடும் கோள்கள் இராகு,கேது என்கிற கோள்களுக்குள் இருந்தால் இந்த தோசத்தைக்கூறுகின்றனர்....................40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சோதிட நூல்களில் காலசர்ப்பம் என்கிற வார்த்தையே இல்லை….தற்பொழுது உள்ள நூல்களில் இவற்றைப் பற்றி எழுதி அதற்குப் பலன்களும்,பரிகாரங்களும் கூறி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் விஸேஸமாக ஒன்றைக்குறிப்பிடுகின்றனர். என்னவென்றால் 33 வயதிற்குப்பின்னரே இந்த சாதகம் வேலை செய்யும் என்கிறனர்….இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…..

யோகமும் / தோசமும் ;

எந்த ஒரு யோகமும், தோசமும் தனக்கென்று ஒரு காலவரையரை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவதில்லை. அவை மானுடம் பிறந்த நாளில் இருந்தே செயல்படும் என்றுதான் நூல்களும் கூறுகின்றன. எல்லா யோகங்களும் பன்னிரெண்டு பாவகங்களுக்கும், தசா புத்திகளுக்குள்ளும் இருந்து தான் செயல்பட்டாக வேண்டும். எனவே நல்ல தசா புத்திகள் காலத்தில் யோகங்கள்,,, மரியாதையை ஏற்படுத்தி நன்கு வெளிப்படுத்தும். அதேபோல் தீய தசா புத்தி காலங்களில் யோகங்கள் நம்மை பெரிதும் பாதிப்பில்லாமல் காப்பாற்றும்……..

நல்ல தசா காலங்களில் தோசங்கள் பெரிதாக தெரியாமல் இருக்கும். தீய தசாகாலங்களில் பெரிதாக வெளிப்படும்…..இதை ஒரு பொழுதும் மாற்ற முடியாது……
நமது நாட்டில் ஒருவருக்கு நடைபெறும் நற்பலன்களை அவரது பொருளாதரத்தை வைத்து கணிக்கின்றனர்…..இது முற்றிலும் தவறானதாகும்.
ஒருவருடைய தாச புத்திகளில் 2 ஆம் பாவம் வேலை செய்யும் பொழுதே பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்…அப்பொருளாதாரம் யோக சாதகமாக இருந்தால் பன்மடங்காக பெருகியிருக்கும்….தோச சாதகமாக இருந்தால் சாதாரண நிலையில் இருக்கும்…

1 ஆம் பாவகத்தினால் தனது முயற்சியும்,பெயரும் விளங்கும்…
2 ஆம் பாவத்தினால் பொருளாதாரம் ஏற்படும்.
3 ஆம் பாவத்தினால் உழைப்பும்,
4 ஆம் பாவத்தினால் மகிழ்ச்சியும்,
5 ஆம் பாவத்தினால் அறிவும்,
6 ஆம் பாவத்தினால் கடன்களும்,
7 ஆம் பாவத்தினால் மற்றவர் தயவும்.
8 ஆம் பாவத்தினால் துன்பங்களும்,
9 ஆம் பாவத்தினால் ஒழுக்கமும்,
10 ஆம் பாவத்தினால் தொழிலும்
11 ஆம் பாவத்தினால் எண்ணம் நிறைவேறுதலும்
12 ஆம் பாவத்தினால் செலவுகளும் நடை பெற்று தான் ஆக வேண்டும்.

இது அனைத்து நல்ல யோகங்களுக்கும், தோசங்களுக்கும் பொதுவான தாகும்…..தோசங்களும்.யோகங்களும் தனக்கென்று தனியாக ஒரு நேரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட முடியாது..இதுவே சோதிடப்பலன்களைக்கூறும் முறையாகும்…..
ஆனால் கால சர்ப்பதோசத்தில் 33 வதிற்குப் பின்னரே பலன்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். உண்மையில் எவ்வித ஆய்வும் செய்யாமல் தனக்கு தெரிந்தது போல் கூறும் முரண்பட்ட பலனாகும்…..

மற்றொரு வேடிக்கை என்னவென்றால், இந்த இராகு ,கேதுக்கள் தங்களுக்குள் உள்ள கோள்களின் செயல்களை செய்யவிடாமல் கட்டுப்படுத்துமாம்….அது எப்படி முடியும். அனைத்துக்கோள்களும் பன்னிரு பாவகத்திலும், இராசிகளிலும், நட்சத்திரங்களிலும் உள்ளன. இந்த இராகு,கேதுக்களும் இதில் அடங்கி உள்ளன… சோதிடப்படி கோள்கள் அனைத்தும் பாவகத்தின்படியே பலன்களைக் கொடுக்கும் என்றுள்ளது..
இப்படியிருக்க காலசர்ப்பதோசத்தில் உள்ள கோள்கள் இராகு, கேதுக்களின் பிடியில் இருப்பதால் செயல்படாது என்பதெல்லாம் சோதிடத்தின் அடிப்படை விதியை உடைப்பதாகும்… .உண்மையில் இவ்வாறு எல்லாம் தோசங்களைக் கூறி நாம் தான் மக்களை அச்சுறுத்தி வருகிறோம்…..

இராகு, கேதுக்கள் எந்த பாவத்தில் உள்ளனவோ அதற்கேற்றபடி செயல்படும்..அதேபோல் தன்னுடன் இணைந்த கோள்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி தனது வேலையைப் போல் செய்யும் என்று கூறலாம்….அதை விடுத்து ஏழு இராசிகளுக்குள் உள்ள கோள்களுக்கு பலன்களைக் கட்டுபடுத்தும் என்பதெல்லாம் சரியாக வருமா என்று தோன்றவில்லை.

வானத்தில் இல்லாத இராகு,கேதுவைக்கொண்டு பலன் கூறுகிறார்கள் என்று நம்மை கேவலப்படுத்தும் அமைப்பினர்க்கு இந்த காலசர்ப்பமும் எடுத்துக்காட்டாக அமையும்…

எதிர்காலத்தின் அறிவியல் வளர்ச்சிக்கு இந்த சோதிடவியல் சாத்திரம் தாக்கு பிடிக்க வேண்டுமென்றால் இராகு, கேதுவிற்கு கூறியுள்ள பலன்களே போதுமானதாகும். 

அதை விடுத்து பரிகாரப் பணத் தேவைக்காக புதிது புதிதாக தோசங்களைக் கண்டுபிடித்து கொண்டிருந்தோமேயானால் வெகு விரைவில் எதிர்காலம் நம்மை ஒதுக்கிவிடும்…..   

ஆய்வு  செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இருக்கிற சோதிடவியலை நாம் கெடுக்காமல் இருந்தால் போதும்…..

மிக்க நன்றி.

Professor Dr.T.Vimalan. Ph.D.
21 / 03 / 2015.