Wednesday 11 March 2015

அயனாம்சமும்---சோதிடக் குழப்பங்களும்-#Ayanamsa -11-03-2015.


அன்புடன் அனைவருக்கும் வணக்கம். மிகுந்த இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எனது பிளாகில் சந்திக்கிறேன்….
           
              அயனாம்சமும்---------சோதிடக் குழப்பங்களும்

நிலையான இராசி மண்டலத்திற்கும்( sidereal zodiac) , கோள்களின் சுற்றுப்பாதைக்கும்(Tropical zodiac) இடையில் உள்ள வேறுபாட்டு பாகையின் அளவைக்குறிப்பதே இந்த அயனாம்சமாகும்…

நிலையான இராசிமண்டலம்… 

அன்பர்களே நீங்கள் வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த நட்சத்திரங்களில் வெறும் கண்களுக்குப் புலப்படும் ஒளி மிகுந்ததை கோடுபோல் இணைத்து ஏற்படுத்தப் பட்டதே இராசிமண்டலமாகும்..இவற்றை ஏற்படுத்தி 2500 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.. ஆனால் கி.மு 350க்கு முன்னர் கிரேக்கர்கள் ஏற்படுத்திய விலங்கின அடையாளங்களின் இராசி மண்டலத்தின் பெயர்களையே இன்றுவரை நாம் பயன் படுத்தி வருகிறோம்.. 

ARIES,TARUS,GEMINI,CANCER,LEO,VIRGO,LIBRA,SCORPIO,SAGITARIES,CAPRICON,AQURIES, PISES.ஆகிய இப்பெயர்களும் அடையாளங்களையும் உருவாக்கியவர்கள் கிரேக்கர்கள்ஆவர்.இந்த நட்சத்திரக்கூட்ட இராசி மண்டலம் நிலையானதாகும். எப்பொழுதும் நாம் வானத்தில் பார்க்கின்ற அதேஇடத்திலேயே இருக்கும்… இந்த இராசி மண்டலத்தையே 360பாகைகள் கொண்டதாக  பிரித்துள்ளோம் ஒவ்வொரு 30 பாகைக்கும் ஒரு இராசியாக பிரித்துள்ளோம். இதில் மேச இராசியை முதல் இராசியாக கணக்கில் கொண்டுள்ளோம். இது துலாராசின் சித்திரை நட்சத்திரம் (spica) தொடர்புபடுத்தி உருவாக்கியதாகும்…
( நான் வானசாத்திரத்தை முழுமையாக பயன்படுத்தப்போவதில்லை. .விளங்குவதும், விளக்குவதும் கஸ்டமாகும். ஆதலால் பாமரரும் புரியும்படி எழுதுகிறேன்.)

இந்த இராசி மண்டலத்தின் தொடக்கப்புள்ளியான 00.00.00 அளவு மேசராசியில் உள்ளது. இராசிமண்டலம் கோடிக்கண்க்கான மைல்களுக்கு அப்பால் உள்ளன. இதற்கு கீழ்பகுதியில் தான் கோள்கள் சுற்றி வருகின்றன.. அன்பர்களே இராசி மண்டலத்திற்கும், ஒவ்வொரு கோள்களுக்கும் இடைப்பட்ட தூரம் கோடிக் கணக்கான மைல்களாகும்… எனவே இராசி மணடலத்திற்கும்,கோள்களுக்கும் நிறைய இடைவெளி இருப்பதை புரிந்து கொள்க.

கோள்கள் மண்டலம் (வெப்ப மண்டலம்)

இப்பொழுது கோள்களின் மண்டலத்திற்கு வருவோம்.. சூரியனை மையமாக வைத்து நீள் வட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் கோள்களின் பாதையையே (TROPICAL ZOTIAC) என்கிறோம். இந்த சுற்றுப்பாதை நிலையானதாக இல்லை.. ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் பாதை மண்டலம் ஒரு குறிப்பிட்ட அளவு சாய்ந்து கொண்டே இருக்கிறது… இந்த பாதை கடக இராசியில் தொடங்கி மகரராசியில் முடியும்..

தற்பொழுது கோள்களின் வட்டப் பாதையின் தொடக்கப்புள்ளி மீன ராசியில் உள்ள 336 ஆவது பாகையில் உள்ளது.. ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் வட்டப்பாதை 00பாகை,00கலை, 50.29 விகலை சாய்ந்து கொண்டிருக்கிறது.

 கோள்களின் சாயன நிலை

இப்பொழுது இருக்கும் குழப்பம் என்னவென்றால் கோள்களின் வட்டப்பாதை எவ்வளவு விகலை சாய்ந்து கொண்டிருக்கிறது என்பதில் தான் உள்ளது. இதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன..எவரும் முடிந்த முடிவாக கூற முடியாமல் உள்ளது..ஒவ்வொருவர் கண்டுபிடிப்பிலும் உண்மை இருப்பது போல் உள்ளது. நான் மேலே குறிப்பிட்டுள்ள அயானம்சம் என்.ஸி.லஹரி அவர்களுடையதாகும்..இவரைப்போல் நூற்றுக்கணக்கான அயனாம்ச விதிகள் நம்மைப் போட்டு குழப்புகின்றன…

நாம் திருக்கணிதத்திற்கு லகிரியின் அயனாம்சத்தையே எடுத்துக்கொள்வோம்.. இப்பொழுது கோள்கள் மேசராசியின் தொடக்கப்புள்ளியில் இருந்து 24 பாகை சாய்ந்து 336 ஆவது பாகையில் இருந்து தங்களது சுற்றுப்பாதையை தொடங்குகிறது…. இந்த சாய்ந்த நிலையில் இருந்து தொடங்கி நிலையான இராசி மண்டலத்தை கடந்து கொண்டிருக்கிற கோள்களின் நிலைகளை சாயன கோள்களின் நிலைகள் என்கிறோம்…  இந்த நிலையே வானத்தில் ஒரு கோள் சென்று கொண்டிருக்கும் உண்மையான நிலையாகும்.

சாயன நிலைகளில் உள்ள கோள்களின் அடிப்படையிலேயே மேற்கத்திய சோதிடப்பலன்கள்( WESTERN ASTROLOGY) கணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கோள்களின் வட்டப்பாதை தோராயமாக 00.00.53 விகலை அளவு சாய்ந்த கொண்டே  இருக்கிறது..இது நமது நிலையான இராசிமண்டலப் புள்ளியான மேசராசியில் இருந்து விலகிக் கொண்டே இருப்பதால் இதை சாயன நிலை என்கிறோம் இந்த ஆண்டு 24.00.00 பாகை சாய்ந்துள்ளது….

கோள்களின் நிராயன நிலை   

கோள்களின் சாயனநிலையில் உள்ள அளவுகளில் தான் நாம் வானத்தில் உள்ள இராசிகளில் கோள்களை அடையாளம் காணமுடியும்..ஆனால் நமது இந்திய பஞ்சாங்கங்களும், சோதிடமும் நிராயன நிலையில் கோள்களை கணக்கிடூ செய்து பலன்களைக் காண்கின்றது.

நிலையான இராசி மண்டலத்தின் தொடக்கப்புள்ளியை விட்டு சாய்ந்த நிலையில் தொடங்கும் கோள்களின் தொடக்கப்புள்ளியின் அளவைக் கழித்து(அயனாம்சம் அளவு) விட்டு பழையபடி இரண்டு தொடக்கப்புள்ளிகளையும் ஒன்றாக இணைத்து விடுகிறது. பின்னர் அதிலிருந்து கோள்கள் எந்த இராசியில் இருக்கிறது என்றுகணக்கிட்டு பலன்கள் கூறுவது நிராயன கணித முறையாகும்…

எடுத்துக்காட்டாக……..இன்று 11-03-2015 அன்று மாலை 5.00 மணிக்கு சந்திரனின்  நிராயன நிலை 210.03.58.ஆகும்.  ஆனால் சந்திரனின் சாயன நிலைக்கு 23.59.00 அளவை கூட்டினால் 234.02.58 வரும் இதுவே வானத்தில் சந்திரன் சென்று கொண்டிருக்கிற உண்மையான நிலையாகும்… இன்று அனுசம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் என்று கூறினாலும் உண்மையில் சந்திரன் கேட்டை மூன்றாம் பாதத்தில் சென்று கொண்டிருக்கிறது..

நிராயன கணிதத்திற்காக கோள்களின் சாய்ந்த அளவான அயனாம்சத்தைக் கழித்துக் காணும் கோள்கள் நிலையே நிராயன கோள்கள்நிலையாகும்..

இது மேசராசியின் 00.00.00 அளவில் மீண்டும் கோள்கள் நிலைகளைக் கொண்டு வருவதாகும்.. இப்பொழுது ஓரளவு புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்…

சாயனம் என்பது கோள்களின் வட்டப்பாதையின் தொடக்கம் மேசராசியின் தொடக்கத்திலிருந்து விலகிய நிலையாகும்…நிராயனம் என்பது சாய்ந்த நிலையை பழையபடி மேசராசிப்புள்ளிக்கு கொண்டு வந்ததாகும்….
சாயனம்- நிராயனம் ஆகிய எந்த ஒன்றில் கோள்கள் சென்று கொண்டிருக்கின்றன என்பது தங்களுக்கு நன்கு புலப்படும்……..

(பூமியில் இருந்து பார்ப்பதால் கோள்கள் மேசராசிப்புள்ளியில் இருந்து சாய்ந்துள்ளது போல் இருக்கும்.ஏதாவது ஒரு கோளில் இருந்து பார்த்தால் பூமி சாய்ந்தது போல் இருக்கும்....வான சாத்திரம் அதிகம் பயன்படுத்தாமல் இவ்வளவு தான் எளிமையாக என்னால் விளக்க முடியும்..)

இந்திய சோதிடமுறை நிராயன மண்டலத்தில் கோள்களை நிறுத்தி பலன்கள் கூறுவதாகும்..
மேற்கத்தியமுறையில் சாயன மண்டலத்தில் கோள்களை நிறுத்தி பலன்கள் காணப்படுவதாகும்……


மிக்கநன்றி……
Professor.Dr.T.Vimalan.Ph.D.
11-03-2015.