ஸப்தரிஸிகளும்
சோதிடமும்
எனது அன்பு நண்பர்களே
!! மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்…..
நீண்ட நாட்களாக
மனதில் இருந்த ஒரு பாரத்தை இக்கட்டுரை வழியாக உங்களிடம் இறக்கி வைக்க முன் வந்துள்ளேன்..
தொடக்க காலத்தில்
சோதிடம் பற்றிய செய்திகளை அறிய முற்படும் பொழுது சிலர், சோதிடத்தை ரிஸிகள் தங்களது
மெய்ஞானத்தில் கண்டு பிடித்தனர் என்று கூறினர்…. அப்பொழுது இது பற்றிய ஆய்வுகள் செய்வதில்
முனைப்புக் காட்டாமல் ,சோதிடம் கூறுவதிலேயே ஆர்வம் அனைத்தையும் வைத்திருந்தேன். பின்னர் பலர் சப்தரிஸி நாடி நூலில் கூறியுள்ளது
என்பதைக் கேள்விபட்டு அந்நூலை பார்க்கவும்,வாசிக்கவும் நேர்ந்தது..
அவ்வாறு படிக்கும்
பொழுது பல சந்தேகங்கள் எழுந்தன. அவற்றை தீர்த்து வைப்பதற்காக சில சோதிடசிகாமணிகளை அணுகிய
பொழுது அவர்கள் அரை குறையாகவே பதில் கொடுத்தார்களே தவிர முழுமையான எந்த ஒரு செய்தியும்
கிடைக்கவில்லை.. பின்னர் நானே ஆய்வுகள் செய்து முடிவுகள் அறிவிக்கலாம் என்ற பொழுது
எனக்கு முழு நேர ஆசிரியப் பணி கிடைத்துப் பணிக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால்
கூறமுடியவில்லை.. தற்பொழுது அக் கட்டுப்பாடு இல்லாததால் எழுதுகிறேன்….
ரிஸிகள் ;
இந்தியாவைப் பொருத்தவரை ரிஸிகள் இல்லாத கலாச்சார
வாழ்வு இல்லை என்றே கூறலாம். அவ்வாறு மக்களுடைய வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெற்றவர்களாக
ரிஸிகள் உள்ளனர்…. எந்த ஒரு சிக்களுக்கும் தீர்வு கூறுவதில் திறமை பெற்றவர்களாக இருந்துள்ளனர்.
..இருக்கின்றனர்
ரிஸிகளிடம் மதிப்பும், மரியாதையும் உள்ளவர்கள்
இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகின்றனர்… அதிலும் வட இந்தியாவில் கூடுதலாகவே உள்ளனர்…
இவ்வாறு இந்திய ரிஸிகள், இந்திய மக்களிடம் அதிகாமாக செல்வாக்குப் பெற்றுள்ளனர்… தற்பொழுதுள்ள
ரிஸிகளுக்கே இவ்வளவு செல்வாக்கு என்றால் , அக்கால ரிஸிகளுக்கு கேட்கவா வேண்டும்.. புராணக்
கதைகளிலும், காவியங்களிலும், சமய நூல்களிலும் ரிஸிகளின் கூற்றே முதன்மையானது என்று
இருந்துள்ளது.
இந்து சமயத்தின் வேதங்கள், இதிகாசங்கள்,
புராணங்கள் போன்ற அனைத்திலும் ரிஸிகளின் பங்கு அதிகமாக உள்ளன. வேதங்களை இயற்றிய அனைத்துப்
பண்டிதர்களும் பெயர்கள் இல்லாமல் ஒரெ ஒரு பெயரான “ வியாசர் “ என்று கூறுகிறோம் அல்லவா…{
என்ன வேதங்களை பல பண்டிதர்கள் இயற்றினார்களா என்று சந்தேகம் வருகிறதா???.. நான்கு வேதங்களும்
ஒருவரால் எழுதப்பட்டவை அல்ல..
ஒவ்வொன்றிற்கும் சுமார் 500 ஆண்டுகளுக்கும்
குறைவான இடைப்பட்ட காலங்களில் உருவாக்கப் பட்டன. எனவே இவை அனைத்தும் பல மாணுடர்களால்
எழுதப்பட்டவை ஆகும்.. ஆனால் அவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.. பொதுவாக வியாசர் என்று
கூறப்படுகிறது.. இவ்வாறு சமய நூல்களில் பல பெயர்கள் உள்ள ரிஸிகள் உள்ளனர்.
இந்துசமய வேதத்தில் உள்ள வானசாத்திரத்தை
தொகுத்தளித்த மகரிஸி லகதா வையும் ரிஸி என்றே அழைக்கிறோம். எனவே இந்தியர்களின் வாழ்வில்
ரிஸிகளின் பங்களிப்பு அதிகமாகவே இருந்துள்ளது.
அதே பொல் இந்திய வானசாத்திரத்தில் பதினெட்டு
சித்தாந்தங்கள் இருந்ததாக ஒரு கூற்றும் உள்ளது. ஆனால் அந்த சித்தாந்தங்களின் பெயர்கள்
உள்ளனவே தவிர ,,, சித்தாந்தங்கள் இல்லை….
பதினெட்டு சித்தாந்தங்கள் :
1.சூர்ய…, 2.பிதாமக…,3.வியாச…,4.வசிஸ்ட…,5.அத்ரி….,6.பராசர…..,7.காஸ்யப….,
8.நாரத….., 9.கர்க….,10.மரீஸி….,11.மனு…..,12.ஆங்கிரஸ….,13.
லோமஸ….., 14.பௌலிஸ..,15.ஸ்யாவன…,16.யவன….,17.பிருகு…,18.ஸௌனக….. என்று இவர்களின் பெயர்களைக்
கொண்டே சித்தாதங்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது… இந்த நூல்கள் எதுவுமே தற்பொழுது இல்லை….
சோதிட ரிஸிகள்
உண்மையில் சோதிட ரிஸிகள் என்று எவருமே இல்லை.வான
சாத்திரத்தை அறிந்திருந்த ரிஸிகள் சோதிட சாத்திரத்தை எழுதவில்லை.
அப்படியானால் பராசர ஹோரா ஸாஸ்த்ரா என்ற சோதிட
நூலை இயற்றியது பராஸர ரிஸி இல்லையா என்ற வினா எழுகிறது… உண்மையில் நமது இதிகாசப் புராணங்களில்
கூறப்படும் பராஸரர் இந்த சோதிட நூலை இயற்றியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை… இவர் வாழ்ந்த
காலமாக கூறப்படும் காலங்களில் வானசாத்திரமே வளர்ச்சியடையாத நிலையில் இருந்துள்ளது..
அப்படியிருக்கும்பொழுது, நன்கு வளர்ச்சி பெற்ற சோதிட நூலான பராஸர ஹோரா ஸாஸ்த்ராவை எழுதுவதற்கு
வாய்ப்பே ஏற்பட முடியாது…. ஏனெனில் இந்நூலில் உள்ள 32 வகையான தசாக்களில் ஒன்று கூட
வராகமிகிரரின் நூலில் இல்லை.. வராகரின் பிருகத் சாதகத்தில் உள்ள தசாகணிதம் வேறு மாதிரியாக
உள்ளது.
புராணக்கதைகளின் படி வராகமிகிரர் ,,, பராசரர்க்கு
பிந்தியவராவார்.. எனும் பொழுது முந்தியவரான பராசரரின் தசாகணிதத்தை வராகமிகிரர் எழுதியிருக்க
வேண்டும் ,அப்படி எழுதவில்லை.. ஆனால் பராசர சோதிட நூலோர் ,,,வராகரின் தசா கணிதத்தை
தவிர்த்து ,32 வகையான தசா கணிதத்தை கொடுத்தள்ளார்.. எனவே வளர்ந்துபட்ட பராசர ஹோரா சாத்திர சோதிட நூல் வராகருக்குப்
பிந்தியதாகும். வராகரரின் காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டாகும்..இவருக்குப் பின்னர் பராஸரர்
வாழ்ந்ததாக கூற முடியாது… ஆதலால் பிருகத் பராஸர ஹோரா ஸாத்திர நூல் நல்ல ஒரு சோதிட அறிஞரால்
இயற்றப்பட்டு, அவர் பெயரில் வெளியிடாமல் , ரிஸியின் பெயரால் வெளியிடப்பட்டுள்ளது…
இந்நூலைத் தவிர தமிழில் பல சோதிடநூல்கள்
ரிஸிகளின் பெயர்களில் எழுதப் பட்டுள்ளன. அவற்றில் மொழிபெயர்ப்பு நூல்கள் , கௌஸிக ஸிந்தாமணி
போன்ற தமிழ் சோதிட நூல்கள் அனைத்தும் நல்ல சோதிட அறிஞர்களால் எழுதப்பட்டதாகும். அவற்றிற்கும்
நமது நாட்டின் ரிஸிகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை.
இக்கருத்துக்கு வலுசேர்ப்பதற்கு மற்றொரு
காரணத்தையும் கூறலாம்… வளர்ந்துபட்ட சோதிட சோதிட க்கருத்துக்கள் உள்ள நூல்கள் அனைத்தும்
கி.பி.5 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டதாகும்.. ரிஸிகளின் காலம் கி.பி. 5
ற்கு முந்தியதாகும். எனவே சோதிடர்கள் தங்களுடைய கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்ற அடிப்படையில் தங்களது சோதிட நூல்களில் ரிஸிகளின் பெயர்களைப் பயன் படுத்தியுள்ளனர்…
சப்தரிஸி நாடிசோதிட நூல்..
சென்னை கீழ்திசை சுவடி ஆராய்ச்சி கழகத்தின்
சார்பில் 1950 க்குப்பின்னர் வெளியிடப்பட்ட நூல்களாகும். இவை மேசம் முதல் கன்னி வரை
ஆறு இலக்னங்களுக்கு தமிழ் சோதிடப் பாடல்களுக்கு விளக்கவுரையுடன் எழுதப்பட்டதாகும்.
ஒவ்வொரு இலக்னத்திற்கும் சுமார் 100 முதல்
150 சாதகங்கள் கொடுக்கப்பட்டு அதற்குப் பலன்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் உள்ள சாதகங்களின்
கோள்கள் நிலைகள் அனைத்தும் கி.பி 1850 முதல் 1900 வரையுள்ள காலங்களுடையதாகும்… இக்காலங்களில்
நிச்சயமாக எந்த ரிஸிகளும் வாழவில்லை.. சரி இக்காலத்தில் உள்ள கோள்கள் நிலைகளைக் கணித்து
முன்னரே கூறியுள்ளனர் என்றால் எந்த ரிஸிக்கு தமிழ் மொழி தெரியும்????????????????/
சரிஅப்படியே தமிழ் தெரிந்த ரிஸி தான் எழுதியிருந்தாலும் முந்தைய காலத்தின் தமிழ் வான
சாத்திர நூல் எங்கே என்ற பல வினாக்கள் எழுகின்றன.
இவ்வாறு பல்வேறு ஐயப்பாடுகளுடன் கூடிய சப்தரிஸி
நாடி சோதிடம் நல்ல ஒரு சோதிடரால் எழுதப்பட்டதாகும்…அதற்காக பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளார்.
உண்மையில் வரவேற்கப்படக்கூடியதாகும்..
ஆனால் அந்நூலின் தற்காலப் பயன் பாடு பற்றி
சிந்திக்கும் பொழுது, எவ்விதப் பயனும் இல்லாததாகவெ உள்ளது..
நாடி சோதிட நூல்கள் என்பது பழங்காலத்தியது
என்பது பொய்யான கூற்றாகும்.நாடி சோதிட நூல்கள், சுவடிகளில் உள்ள தமிழ் சோதிட பாடல்கள்
என்பது எந்த ரிஸிக்கும் தெரியாத மொழியாகும். அனைத்து ரிஸிகளின் மொழிகளும் ஸமஸ்கிருதமே
. ஆனால் நாடி சோதிட நூல்களில் உள்ள ரிஸிகள் ஸமஸ்கிருதத்தினர் எனும் பொழுது அவர்கள்
எழுதிய பாடல்களும் சமஸ்கிருதமாகவே இருக்க வேண்டும்… அப்படியில்லை.. பாடல்கள் அனைத்தும்
தமிழ் மொழியில் உள்ளன.. எனவே சப்தரிஸி நாடி சோதிட நூல்களின் கருத்துக்கள் தற்கால தமிழில்
கவியுடன் பாடல் எழுதத் தெரிந்த சோதிடர்களாலேயே எழுதப்பட்டதாகும்.
இந்த சப்தரிஸி நாடி சோதிடத்தில் உள்ள சோதிடக்கருத்துக்கள்
அனத்தும் தற்கால வாழ்விற்கு பயன் படக்கூடியதும் இல்லை…
சரி அகத்தியர் போன்ற ரிஸிகள் தமிழ் தெரிந்தவர்
என்ற வினா எழலாம். நமது பல்கலைக் கழக தமிழ் ஆய்வாளர்கள் 41 அகத்தியர்கள் வாழ்ந்துள்ளதாக
கண்டு பிடித்துள்ளனர். இதில் எந்த அகத்தியர் ரிஸியாக இருந்தார். அவர் வாழ்ந்த காலம்
என்ன???? அப்பொழுது வான சாத்திர வளர்ச்சி என்ன?????/ அவருக்கு 1850 ல் உள்ள கோள்களின்
நிலையைக் கணித்து பலன் கூற முடியுமா போன்ற பல வினாக்கள் எழுகின்றன…
இவற்றின் அடிப்படையைக்கொண்டு பார்க்கும்
பொழுது ரிஸிகளின் பெயர்களில் உள்ள சோதிட நூல்கள் அனைத்தும் சோதிட அறிஞர்களால் எழுதப்பட்டது
என்று முடிவிற்கு வர முடிகிறது….
அதேபோல் சப்தரிஸி நாடி சோதிட பாடல்கள் அனைத்தும்
தமிழில் இருப்பதால், அவற்றை ரிஸிகள் எழுதவில்லை என்றும் , சோதிடர்களே எழுதினார்கள்,,,
எழுதுகிறார்கள் என்றும்முடிவிற்கு வர முடிகிறது…….
பழையனவற்றை ஆய்வு செய்வோம் !!! ஏற்புடையதை
பயன் படுத்துவோம்… பயனற்றதை மறுதலிப்போம்…
சோதிடத்தை நாம் ஆய்வு செய்தால் எல்லோராலும்
போற்றப்படுவோம்… மற்றவர்கள் ஆய்வு செய்தால் அனைவராலும் தூற்றப்படுவோம்…
வாழ்க சோதிடம்……………..
மிக்க நன்றி……..
Professor. Dr.T.Vimalan…
02-02-2015.