VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Friday, 13 February 2015

பழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015

பழமொழிகளும் -----   சோதிடமும் அன்பானவர்களே !!!!!! திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி பல மனிதர்களின் நம்பிக்கைகளை தகர்ப்பதை இன்றும் காணமுடிகிறது…. பழமொழிக்கும் சோதிடத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்படியிருக்க எப்படி சோதிடத்தில் பழமொழிகள் வந்திருக்கும் என்ற வினா எழுகிறது அல்லவா!!!!. இதை ஆய்வுக்கு உட்படுத்தினால் பல உண்மைகள் ஆய்வரங்கத்திற்குள் வந்து விடும்.. ..அதையும் வரவேற்போம்…. ” ஜென்ம குரு வன வாசம்”  என்று ஒரு பழமொழி……… உள்ளது…. அதாவது பிறக்கும் பொழுதோ அல்லது கோச்சாரத்தில்...

Sunday, 8 February 2015

சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...

Bathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால மானுடம் கண்டுபிடித்ததே இறைவனும், அதற்குரிய கோட்பாடுகளும் ஆகும். இந்த இறைக் கோட்பாடுகள் உருவாக்கப் பட்டதாலேயே மானுட வாழ்வு நாகரீகமானதாக உருவெடுத்துள்ளது. அந் நாகரீகத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மானுடம் பல்வேறு நம்பிக்கைகளை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது.. அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட நம்பிக்கைகளில் ஒன்றுதான் சோதிடம் பார்ப்பதாகும். சோதிடத்தின் மூலமாக தங்களது எதிர்காலத்தை அறிந்து அதன்படி வாழ்க்கையை...

Monday, 2 February 2015

ஸப்தரிஸிகளும்---- சோதிடமும் 02-02-2015.

ஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே !! மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஒரு பாரத்தை இக்கட்டுரை வழியாக உங்களிடம் இறக்கி வைக்க முன் வந்துள்ளேன்.. தொடக்க காலத்தில் சோதிடம் பற்றிய செய்திகளை அறிய முற்படும் பொழுது சிலர், சோதிடத்தை ரிஸிகள் தங்களது மெய்ஞானத்தில் கண்டு பிடித்தனர் என்று கூறினர்…. அப்பொழுது இது பற்றிய ஆய்வுகள் செய்வதில் முனைப்புக் காட்டாமல் ,சோதிடம் கூறுவதிலேயே ஆர்வம் அனைத்தையும் வைத்திருந்தேன்.  பின்னர் பலர் சப்தரிஸி நாடி நூலில் கூறியுள்ளது என்பதைக்...

Saturday, 24 January 2015

நளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.

அன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் நடந்தது என்ன,,,, அவற்றினால் பலன்கள் உண்டா,,,, நமது சோதிட உலகிற்கு தேவைதானா,,,,, போன்ற பல வினாக்கள் என்னிடம் கேட்கப்பட்டன…….  இதற்கு விளக்கம் அளிக்கும் அடிப்படையில் சில தகவல்களை கூறிய பின்னர் .. சனியன்களுக்கு விளக்கம் தருகிறேன்… . 1 ஏழரைச் சனிக்கு திருநள்ளாறு சென்று வந்தால் ஒரு பரிக்காரம் என்கிறார்கள். 2 நளன் என்கிற மகாராஜா தன்னைப் பிடித்த சனியன் இங்கு வந்து வழி பட்ட பின்னரே துன்பம் நீங்கியது என்கிறார்கள்…  3...

Wednesday, 14 January 2015

தமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..

அன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட வேண்டும் என்று இருந்தேன்.. அது தற்பொழுது நினைவிற்கு வந்தது……முழுவதுமாக எழுதி விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்…….  தமிழ் ஆண்டு பிறப்பு……… தமிழுக்கு ஆண்டு கணக்கு ……….தமிழ் வருடம் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று எவர் கூறினாரோ தெரியவில்லை.  அனைவரையும் வாழவைத்து அவர்தம் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது தமிழகமே !!!!!!!! உண்மையில் தமிழர்கள் காலக்கணிதங்களில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகக் கருதமுடியவில்லை…..அப்படியிருந்திருந்தால் வடமொழி...

Monday, 12 January 2015

சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்....12-01-2015

அன்புடையீர் ,வணக்கம்…..நமது முகநூல் நண்பர் ஒருவர் சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்ன ???? கேட்கக் கூடாத கேள்விகள் என்ன என்று எழுதுமாறு கேட்டார். அதற்கான விளக்கங்கள் ……………………………………………………………………………….. சோதிடரிடம் சாதகத்தைக் கொடுக்கலாம். அல்லது தற்காலத்தில் கணனி வசதியுடன் கூடிய சோதிடர்கள் இருப்பர் .அவர்களிடம் உங்களது பிறந்த தேதி, நேரம்,ஊர். முதலியவற்றை கொடுத்து விடுங்கள்……அவர் எந்த முறையில் சோதிடப் பலன்கள் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்……( தற்காலத்தில் சோதிடர் கூறும் பலன்கள் அனைத்தையும் கைபேசியின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.)...

Thursday, 8 January 2015

சோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்---08 / 01 / 2015....

சோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள் உலகில் பல கலைகள் உள்ளன.அவை ஒவ்வொன்றும் மானுடத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறு பயன் படுவதில் முதன்மையான கலையாக சோதிடத்தை தான் கூற முடியும்.     இந்த சோதிடக்கலையானது,,,,  வானசாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற கலைகள் எவற்றையும் சாராமல் 4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. மிகவும் பழைமையான சோதிடக்கலை தனக்கே உரிய வகையில் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த மனிதர்களால் வளர்க்கப்பட்டதாகும். அதிலிருந்தே மானுடத்திற்கு இச்...