Monday 12 January 2015

சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்....12-01-2015


அன்புடையீர் ,வணக்கம்…..நமது முகநூல் நண்பர் ஒருவர் சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்ன ???? கேட்கக் கூடாத கேள்விகள் என்ன என்று எழுதுமாறு கேட்டார். அதற்கான விளக்கங்கள் ………………………………………………………………………………..

சோதிடரிடம் சாதகத்தைக் கொடுக்கலாம். அல்லது தற்காலத்தில் கணனி வசதியுடன் கூடிய சோதிடர்கள் இருப்பர் .அவர்களிடம் உங்களது பிறந்த தேதி, நேரம்,ஊர். முதலியவற்றை கொடுத்து விடுங்கள்……அவர் எந்த முறையில் சோதிடப் பலன்கள் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்……( தற்காலத்தில் சோதிடர் கூறும் பலன்கள் அனைத்தையும் கைபேசியின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.) அந்த முறையின் அடிப்படையில் பலன்கள் கூறச்செய்யுங்கள்…….முக்கியமாக மற்ற சோதிடரைக் குறை கூறும் பேச்சை தவிர்க்கச் சொல்லுங்கள்..அவருடைய கருத்தை மட்டும் கூறச் செய்யுங்கள்……..அதுவே போதுமானதாகும்……

கேட்க வேண்டிய கேள்விகள்


1 உங்கள் இலக்னத்தின் பொதுப் பலன்களைக் கேளுங்கள்….
உங்கள் சாதகப் பலன்களின் பொதுப் பலனாக,, இலக்னத்தின் பலன்களைக் கேளுங்கள்…..இதில் எத்தனை விழுக்காடு சரியாக வருகிறதுஎன்று பாருங்கள்….

2 பன்னிரு பாவகத்திலும் கோள்கள் இருக்கும் பலன்கள், பாவக அதிபதி மாறி நிற்கும் பலன்களை இணைத்து கூறும் பலன்களைக் கேளுங்கள்….

3 கூட்டுக்கோள்களின் பலன்களைக் கேளுங்கள்……

4 சிறப்பு அரச யோகப் பலன்களைக் கேளுங்கள்….

5 தசா புத்திப் பலன்களைக் கேளுங்கள்…..

ஒரு சிறந்த சோதிடர் மேற்கண்ட ஐந்து கேள்விகளிலுமே அனைத்துப் பலன்களையும் கூறி விட முடியும்……… அவ்வாறு கூறாமல் குறைத்து கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்…..அதற்காக  சில கேள்விகளைக் கேட்கலாம்..
படிப்பு
தொழில்
திருமணம்
மனைவி / கணவர் எவ்வாறு இருப்பார்கள்.
செல்வம்
குழந்தைகள்
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

கடன்
நோய்
நஸ்டம்
துன்பம்
தர்ம காரிய சிந்தனை
போன்றவற்றை மட்டும் கேட்டால் போதும்…….
----------------------------------------------------------------------------------------------------------------------------

கேட்கக் கூடாத கேள்விகள்?????

         முன்னர் நடந்த பிறப்புகள்,,,,இறப்புகள் பற்றி கண்டிப்பாக கேட்கக் கூடாது…  ஏனெனில் சரியாகச் சொல்கிறேன் என்று கூறி தோசங்களை அதிகப் படுத்தி உங்களைப் பயமுறுத்தி பரிகாரச் செயல்களில் ஏமாற்றி விடுவார்கள்……………எந்த ஒரு பரிக்காரத்தினாலும் எதையும் மாற்றிவிட முடியாது….அனைத்தும் ஏமாற்றும் வேலையே……

             தோசங்கள் ஏதாவது இருக்கிறதா ? என்ற கேள்வியைத் தவிர்க்க வேண்டும் ஏனெனில் தோசமில்லாத சாதகம் உலகில் இல்லை…..எனவே பயந்து பரிகாரம் நீங்களே கேட்காதீர்கள்…..அதற்குப் பதிலாக உங்கள் கேள்விக்கான செயல்கள் எப்பொழுது நடக்கும் என்று கேட்டு அதை ஞாபகத்துடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்………நடக்கவில்லை என்றால் அவரை தவிர்க்கலாம்…….

          நீங்கள் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அக்கேள்விக்கான செயல் நடக்கும் காலத்தை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள்…………………………………செயலை நடக்கச் செய்கிறேன் என்று கூறுபவராக இருந்தால் அவரை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்………

           ஆயிரக்கணக்கான கேள்விகள் உள்ளன….அவற்றில் தற்பொழுது தேவையற்ற கேள்விகள் நிறைய இருக்கும்..அவற்றை எல்லாம் கேட்காதீர்கள். ஒருவர் சாதகத்தைக் கொண்டு இன்னொரு உறவினர்க்குப் பலன்கள் கேட்காதீர்கள்………கூடுமானவரை அவரவர் சாதகத்தைக் கொண்டு சாதகப் பலன்கள் பார்ப்பது மிகவும் பயனுடையதாகும்…..

          ருது சாதகம் என்று ஒன்றை எழுதாதீர்கள்..அதற்குப் பலன்களும் பார்க்காதீர்கள்….

         எடுத்தவுடன் பெண்களின் ஒழுக்கம் பற்றி பேசும் சோதிடரிடம் கவனமாக இருங்கள் ..அவர் உங்களையும் ஒழுக்கக்கேடாக சித்தரித்து விடுவார்………. சில செய்திகள் கேட்கப்பட்டாலே கூற வேண்டும்…….((((((((((( புத்தர் கூறுகிறார் ……………அவரவர் தனது மனதிற்கு ஒளியாக இருக்க வேண்டும்….என்கிறார்…)))).எனவே கீழ்த்தரமான செய்திகளைக் கூறும் சோதிடரை தவிர்த்து விடுங்கள்………………………

         எனது உடன் பிறப்பு,,,,,,,,,,குழந்தைகள் எத்தனை என்ற வினாக்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்…….ஏனெனில் இவை அனைத்தும் தற்காலத்திற்கு ஏற்ற கணீதங்களாக இல்லை……. மாறாக அவை கிடைப்பதற்கு சோதிடக் கோள்கள் துணை செய்கின்றனவா என்று கேட்கலாம்…….

       எனக்கு செல்வ யோகம் வருவதற்கு ஏதாவது வழி உண்டா என்று கேட்காதீர்கள்… அது அச்சோதிடரை செல்வந்தராக்கும்…உங்களை அல்ல…………….

       கோடீஸ்வரராகுவதற்கு ஏதாவது தொழில் கூறுங்கள் என்று கேட்காதிர்கள்….மாறாக எனக்குரிய தொழில் என்ன என்று கேளுங்கள்…..
((( நமக்குறியத் தொழிலைக் கூறும் பொழுது ..அதைச் செய்வதால் இலாபம் வரும் காலத்திலும் சரி…நஸ்டம் வரும் காலத்திலும் சரி நமது மனம் ஏற்றுக்கொள்ளச் செய்யும்………))))))))))))))) உலகில் ஒருவரை இலாபமாக்குவதும்…நஸ்டமாக்குவதும் அவருடைய தனிப்பட்ட சாதகத்தின் நேரமே ஆகும்….அதனால் காலம் கட்டாயமானதாகும்…..

        அதிர்ஸ்டத்திற்கு ஏதாவது வழியைக் கூறுகிறேன் என்றால் அதனால் முழுவதுமாக பாதிக்கப்படுவது நீங்களாகத் தான் இருக்கும்………

எதிர்காலம் எப்படி என்று கேள்விகள் அமைந்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்……………. எதிர்காலப் பலன்களை மாற்றி அமைக்கும் கேள்விகள் இருந்தால் அவர்கள்(((((((((( மாற்றுகிறேன் என்பவர்கள்)))))))) நன்றாக இருப்பார்கள்……..

எதிர்காலப்பலன்கள் துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ எப்படி இருப்பினும் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால் மக்களும் வாழ்வர்,,சோதிடர்களும் வாழ்வர்..


வாழ்க சோதிடம்!!!!!!!!!!!!!
 THANKS…

PROFESSOR DR. T.VIMALAN. Ph.D.


12 / 01 / 2015 ..