Friday 31 October 2014

ஆன்மீகத்தை ஆய்விற்கு உட்படுத்தமுடியாது. ஆனால் சோதிடத்தை ஆய்விற்கு உட்படுத்தமுடியும்.


மதிப்பிற்குரிய சோதிடப் பெரியோர் போடிநாயக்கனூர் திரு.பாஸ்கரன் அவர்களுக்குவணக்கம்.சோதிடவிதிகளைக்கொண்டுஆன்மீகப்பரிகாரங்களை ஆய்வு செய்யமுடியுமா?
ஆய்வுகளின் அடிப்படை விதி ஏன்,எதற்கு,எப்படி? என்ற வினாக்களாகும். இவற்றில் எந்த ஒரு வினாவிற்கும் ஆன்மீகத்தினால் பதில் கொடுக்க முடியாது.
புனிதமானஆன்மீகச்சமயங்கள்மூலநூல்களினால்கட்டப்பட்டதாகும்.யூதர்களின்-பழையஏற்பாடு / இந்துக்களின் –நான்குவேதங்கள் /சமணர்களின் – கல்பசூத்ரா,/ பெளத்தர்களின் –தீப்திகா,வைரசூத்திரம்/ பார்சிகளின் –அவெஸ்தா /கிறித்துவர்களின்-திருவிவிலியம்,/இசுலாத்தியர்களின் –அல்குரான்,அல்ஹதீஸ்,சைவர்களின்பன்னிருதிருமுறைகள்,சிவஞானபோதம்/வைணவர்களின் –நாலாயிரதிவ்யபிரபந்தம்.திருப்பாவை,/சீக்கியர்களின் ஆதிகிரந்தசாகிப். போன்றவையாகும். இவற்றில் எவ்விதமாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்நூல்களில் உள்ளகருத்துக்கள் அனைத்தும் எம்பெருமான் இறைவனால் மக்களுக்கு அளிக்கப்பட்டவையாகும்.அனைத்தும் புனித நூல்களாகும்.அவற்றில் உள்ளகருத்துக்களின்படி வாழவேண்டும். மாறிசெயல்பட்டால் இறைவனின் தண்டனைக்கு ஆளாகவேண்டும்.எனவே நூலின் கருத்துக்களை மாற்றமுடியாது. இங்கு ஏன்,எதற்கு,எப்படி என்ற வினாவிற்கு வழியில்லை. எனவே மாற்றதிற்கு வழிவகுக்கும் அறிவியல் ஆய்விற்கு ஆன்மீகத்தில் இடமில்லை. ஆன்மீகப்பரிகாரத்திலும் இடமில்லை.
சோதிட ஆய்வு ; சோதிடத்தை ஆய்வு செய்யமுடியும். ஏனெனில் இங்கு ஆன்மீகம் என்ற அடிப்படை இல்லை. ஆதலால் சோதிடநூல்களில் கூறியுள்ள எந்த ஒருகருத்தையும் ஆய்விற்கு உட்படுத்தலாம்.எந்த ஒரு இறைவனும் நமக்கு தண்டனை அளிக்கமாட்டார்.எனவே சோதிடம் ஆய்விற்குட்பட்டதாகும்.இக்கலை,பகுதியானஅறிவியலா,அல்லதுமுழுமையான அறிவியாலா என்று நாம் அனைவரும் ஆய்வு செய்து உலகினர்க்கு தெரிவிக்கும் கட்டாயத்தில் உள்ளோம். கே.எஸ்.கே அவர்கள் சோதிடத்தை ஆய்வு செய்து சில முடிவுகளை கொடுத்துள்ளார். அந்த முறையில் பலன் கூறும் பொழுது ஏற்படும் சிக்கல்களை, அம்முறையை பயன்படுத்துபவர்கள் ஆய்வு செய்யவேண்டும். அதேபோல் பாரம்பரிய சோதிடப்பலன்கள் கூறும் நூல்களில் உள்ள கருத்துக்களை பல்வேறு விதிகளை ஏற்படுத்தி சாதகங்களில் எவ்வாறு செயல்படுகிறதுஎன்று ஆய்வு செய்யவேண்டும்.
சோதிடம் இல்லாமல் ஆன்மீகம் வளரமுடியும்.
அதேபோல் ஆன்மீகம் இல்லாமல் சோதிடமும் வளர முடியும். நன்றி.

Professor.Dr.Vimalan.