Friday 18 September 2015
Wednesday 16 September 2015
Monday 20 July 2015
சோதிடமும்- சோதிடர்களும்.--- இரண்டாம் கட்டுரை / 21-07-2015.
23:05
சோதிடமும்- சோதிடர்களும்.
இரண்டாம் கட்டுரை
தமிழ் சோதிட உலகத்தினரே
வணக்கம்.
ஆம் இது ஏமாற்றும் காலமாகும். மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றமுடியுமோ அப்படியெல்லாம் ஒருவரை ஒருவரை ஏமாற்றிக்கொள்கின்றனர்…. அதற்கு பக்க பலமாக பல அமைப்புகள் இருக்கின்றன….. அவற்றில் ஒன்று இந்த சோதிடக்கலையுமாகும்..
பூர்வ
புண்ணியம் என்ற ஒன்றைச் சொல்லி ஏமாற்றும் வித்தை இந்திய சமயங்கள் அனைத்திலும்
உள்ளன. இந்து சமயம் ((((((((((( இப்படி ஒரு சமயமே இல்லை என்போர் இருக்கின்றனர்.. இதை
சனாதன தர்மம் - வைதீக சமயம் என்றெல்லாம் மாற்றிக் கூறுவர்…))))))))))))
இப்பொழுதும் இந்துசமயம் இருக்கிறது .. ஆனால் வழிபாடும், ஆகமங்களிலும் சிறிது மாற்றம்
ஏற்பட்டுள்ளது. முன்னர் ஹோமத்தில் உயிர் பலி கொடுக்கப்படும் .இப்பொழுது அதற்கு
பதிலாக சிறிய வேள்வி குண்டம் அமைத்து பட்டுத் துணிகள் பலியிடப்படுகின்றன…
இந்தியாவில்
உள்ள சமயங்களில் இனக்குழு சமயத்திற்கு அடுத்தாற்போல் பழமையான சமயம் இந்து
சமயமாகும். இச்சமயத்தின் ஆணிவேர்கள்- புனிதம்- தீட்டு- பூர்வபுண்ணியம்
போன்றவையாகும்.. முற்பிறப்பு – அடுத்த பிறப்பு பற்றி பேசும் அமைப்பாகும். அதனால்
முற்பிறப்பில் செய்த தீய கர்மங்களுக்கு, இப்பிறப்பில் நன்மை செய்தால் ,
அடுத்தபிறவியில் நன்மை கிடைக்கும் என்ற அடிப்படையான கொள்கையுடையதாகும்… இந்த
கொள்கை இறைவணக்க பரிகாரமாகவே இருக்கிறது…. இவ்வாறு இறைவனை வழிபட்டால் நன்மை
கிடைக்கும் என்பதாகும்… கி.பி. 700 க்கு முன்னர் அனைத்து ஹிந்து சமய ஹோமத்திலும்
உயிர்கள் பலியிடப்பட்டன. இதற்கு பின்னர் இந்து சமயம் வழிபாடுகள் மாற்றப்பட்டு
கோயில், சிலை வழிபாடுகள் உள்ள சைவ சமயம், வைணவ சமயங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கு
காரணமாக அமைந்தது கி.மு. 600 முதல் கி.பி.700 வரை எழுச்சி பெற்றிருந்த சமண
சமயமும் , பௌத்தசமயமும் ஆகும்.. இவற்றை விளக்கமாக தனியொரு பகுதியாக எழுதுகிறேன்..
(((( யூதசமயம்-- கிறித்துவசமயம்----இஸ்லாம் சமயத்தினர்க்கு முதல் ஜென்மமும் இல்லை..அடுத்த ஜென்மமும் இல்லை... உலகின் மக்கட் தொகையில் ஏழில், நான்கு பங்கு உள்ளனர்.... இவர்களுக்கு பூர்வ ஜென்ம அறிவே கிடையாது.....அதனாலேயே இறுதி தீர்ப்பு நாளுக்காக கல்லறையில் படுத்துக்கிடக்கிறார்கள்.. )))))))))))
இவ்வாறு
சமய நம்பிக்கை கொண்ட பூர்வபுண்ணியம் சோதிடத்தில் இணைக்கப்பட்டு பரிகார லீலைகளை
கட்டவிழ்த்துள்ளனர். இதனால் தற்கால சோதிடர்களும் இந்த பூர்வ புண்ணியம் என்று ஒன்று
உண்டு என நம்பி மக்களிடம் தீய பெயர் எடுக்கின்றனர்.
பூர்வ
புண்ணிய தோசங்களைக் கூறுவது ,அதைச் சொல்லி பரிகாரம் செய்வது அந்த அந்த ,சமயப்
பெரியோர்களின் நம்பிக்கை வாய்ந்த செயல்களாகும்… இதில் சோதிடம் எங்கு வந்தது……
சோதிடத்தில் பூர்வ புண்ணியத்தை சொல்லி பரிகாரச் செயலுக்கு பெரிதும் அடிகோலியது
நாடி சோதிடம் என்று ஒரு பொய்யான ஓலைச் சுவடிகளை தயாரித்து ஏமாற்றிக்
கொண்டிருக்கும் அமைப்பாகும்…
நாடி
சோதிடம் என்ற ஓலைச் சுவடி பார்க்கும் அமைப்பை நம்மவர் எவரும் கற்றுக் கொள்ள
முடியாது…. இந்த அமைப்பு குறிப்பிட்ட குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே
கற்றுக் கொடுக்கப்படும்… பல முனிவர்கள், ரிஸிகள், கடவுள்கள் பெயரால் நாடிப்
பலன்கள் வாசிப்பர்…. இவற்றில் முன்ஜென்மப்பலன்கள் கூறி அதற்கு பரிகாரம் செய்ய
சொல்வார்கள்…((((( இந்த நாடி சோதிடம் கடந்த நூறு ஆண்டுகளாக பொதுமக்களிடம் பயன் படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது இப்படியெல்லாம் எந்த ஒரு ஓலைச் சுவடியும் இல்லை என்று தஞ்சை சரஸ்வதி
மகால் நூலகத்தார் கூறும் அளவிற்கு பொய்யாகவும் உள்ளது….முகநூல் சோதிடர்சபை
தஞ்சையில் நடந்த கூட்டத்தில் இதைப்பற்றி நூலகத்தார் பேசினர்..)))))))))))))))))))))
இந்நிலையில் உள்ள இந்த பரிகார அமைப்பு
படிப்படியாக அனைவரும் பார்க்கும் நமது சோதிடத்திலும் இணைத்து விட்டனர். ((((
தற்கால சோதிட நூல்களில் தான் அதிகமாக எழுதியுள்ளனர்..)))))
சோதிடம்,,, வானசாத்திரம் என்ற கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால் ஆய்வு செய்யப்பட
வேண்டும் … சமயக் கருத்துக்களான பரிகாரம் கூறக்கூடாது…
இல்லை
சோதிடம் சமயம் சார்ந்தது என்றால் ,,, வானசாத்திரமான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு
பலன்கள் கூறக்கூடாது…. அருள் வாக்கு சோதிடராக இருக்கலாம்…..
இரண்டுமில்லாமல்
கடவுளைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டும்., வானசாத்திரத்தையும் எடுத்துக் கொண்டும்
பலன்கள் கூறுவது என்பது தங்களையும், மக்களையும், சோதிடத்தையும் ஏமாற்றும் செயலன்றி
வேறு என்ன சொல்ல… எதைச் சொல்ல..
தொடரும்…………
பேராசிரியர்.
முனைவர்.தி.விமலன்..
#ஜோதிடம் #வான சாத்திரம் #கடவுள் #பரிகாரம்
சோதிடமும்- சோதிடர்களும். 20-07-2015.
01:50
சோதிடமும்- சோதிடர்களும்.
தமிழ் சோதிட உலகத்தினரே
வணக்கம்.
தற்பொழுது 2015 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வடமொழிப்படி(
சமஸ்கிருதம்) --------------------------பிரபாவதி சுற்று மன்மத ஆண்டு ஆடி மாதம் 04
தேதி ( ஆங்கிலம் 20-07-2015) ((((((( தமிழ் ஆண்டு, மாதம்,தேதி தெரியவில்லை. யாராவது
தெரிந்தால் சொல்லுங்கள் ))))))))))))).
இக்காலத்தில் சோதிடம் பார்க்கும் முறையில் பலவேறு பிரிவுகள்
வந்துவிட்டன. அவை 1.பாரம்பரிய முறை 2.பிரசன்ன சோதிட முறை, 3.ஆருடமுறை, 4.மேற்கத்திய
சோதிடமுறை, 5. இகலோக சொதிடமுறை, 6.கே.பி முறை, 7. சார சோதிட முறை என்று பல அமைப்புகளும்,
புதியதாக பல மெத்தடுகளும், ஸிஸ்டங்களும் வருவதாகவும் உள்ளது என்று அறிந்துள்ளோம்… இருக்கட்டும்…
இவை அனைத்தும் சோதிடம் பார்க்க பலவேறு நுணுக்கங்களை உடையது என்று அவற்றைக் கற்றுக்கொடுக்கும்
ஆசிரியர்களும் கூறுகிறார்கள்…நன்மையே!!!!!!!!!!!!!
மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது மேலே கண்ட சோதிடப்பிரிவுகளைப்
பார்க்கும் பொழுது..???????????/// ஆனால் அவை யாவும் ஒன்றன் பின் ஒன்றாக ஆய்வு செய்து
வளர்ந்தது என்றால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்திருக்கும் ..நாமும் பல வகையில்
வளர்ச்சி பெற்றிருப்போம்… உண்மையில் அப்படியெல்லாம் நடைபெறவில்லை….. ஒவ்வொன்றும் தனித்தனியாக
ஏற்படுத்தப்பட்டதாகும்…அதனால் எந்த ஒரு முறையும் முடிவான விதிகளை ஏற்படுத்தி எதிர்காலப்
பலன்களைக் கூற வாய்ப்பை ஏற்படுத்தவில்லை….மாறாக தங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி
ஆய்வு எதுவும் செய்யாமல் தான் கூறுவதே சரியென்று முடிவிற்கு வந்து ஒவ்வொன்றுடனும் சண்டை
செய்வதையே கொள்கையாகக் கொண்டுள்ளன….அதனால் சோதிடர்களாகிய நமக்கு எந்த ஒரு பயனும் இல்லை…
((((((((((( இந்த முறைகளையெல்லாம் கற்றுத் தருகிறேன் என்று கூறும்
நபர்களுக்கெல்லாம் நல்ல வருமாணம்…….ஆனால் கற்று வரும் சோதிடர்களுக்கோ பட்டை நாமம்…))))))
நானும் பல்கலையில் பாடம் எழுதி பட்டங்களைக் கொடுத்தேன்… அப்பொழுதும் நான் அனைத்து மாணவர்களிடம்
கூறுவது இதைத்தான் ..தயவு செய்து ஆய்வு செய்யுங்கள்… இங்கு ஏராளமான விதிகளும் முறைகளும்
உள்ளன…அவற்றை பல நூறு சாதகங்களைக்கொண்டு ஆய்வு செய்து முடிவுகளைக் கொடுங்கள் என்றேன்…ஆனால்
அவ்வாறு ஒரு நபர்கூட இதுவரை வரவேயில்லை…… ஏனென்று கேட்டால் பொருளாதரம் அல்லது வயதைக்
காரணம் காட்டி ஆய்வு செய்ய மாட்டார்கள்…
என்னிடம் பலர் கேட்டதை இங்கு கூறுகிறேன்.. எந்த முறை அனைவரும்
பலன் கூற சரியாக வருகிறது என்று முடிவிற்கு வந்து விட்டீர்களா…. அப்படியானால் அந்த
முறையை உலகிற்கு அறிவியுங்கள்…. நாங்கள் அனைவரும் குழம்பாமல் பலன் சொல்கிறோம் என்றனர்……
நானும் இதற்கு பலன் கூறுவதில் தாமதமாக உள்ளேன்….என்னிடம் எனது
மாணவர்கள் ஒவ்வொருத்தருக்கும் , ஒரே பிரிவின் (((((((((((((( கணித ஆசிரியர்மட்டும்
இவைபோல் ஒவ்வொரு துறையிலும் 50சாதகங்கள் )))))))))) 50 சாதகங்கள் கொடுக்கப்பட்டு, பத்து
விதிகளும் கொடுத்து முடிவு அறிவித்த ஆயிரம்
திட்டக்கட்டுரைகள் உள்ளன….. அவற்றைக் கொண்டு ஆய்வுகள் செய்து கொண்டிருக்கிறேன்…முடிவு
எப்பொழுது வரும் என்று தெரியவில்லை….
இருப்பினும் நாங்கள் செய்த ஆய்வு , ஒருத்தருடைய தொழிலிற்கு எந்த
கோள் கூடுதலாக பங்கு வகிக்கிறது என்றும், அதற்கு எந்த பாவத் தொடர்பில் அக்கோள் செயல்
படுகிறது என்றும் பொதுவாக ஆராயப்பட்டது….. அவ்வாறு பத்து விதிகள் ஏற்படுத்தி ஒவ்வொரு
கோளும் பத்து விதிகளில் 50 சாதகங்களுக்கும் ஏற்படுத்தும் பங்கினை எண்ணி எடுத்து முடிவுகள்
கொடுக்கப்பட்டன….. ஆய்வு மிகச் சிறியதாக இருந்தாலும் ,அடிப்படையான சில முடிவுகளுக்கு
கொண்டு சென்றன….
அவை….
பத்து விதிகளிலும் கோள்கள் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளன..
அவற்றில் தலைபிற்குரிய காரகமான கோள்கள் விகிதாசார அடிப்படையில் கூடுதலாக பங்கு பெற்றதை
காண முடிந்தது… ஒருசில தலைப்பைத் தவிர மற்ற அனைத்தும் ஓரளவு நன்றாகவே இருந்தன…. ஆனால்
தனியாக ஒரு கோள் மட்டும் குறிப்பிட்ட விதியில் மட்டும் செயல் படுகிறது என்று முடிவிற்கு
வர முடியவில்லை….. சரி இவற்றையெல்லாம் அடுத்து அடுத்து தாங்களே புதிய விதிகளை ஏற்படுத்தி
ஆய்வு செய்வார்கள் என்று எதிர் பார்த்தால் ,,,அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை……..
உங்கள் பார்வைக்கு ;-
ஆய்வு
விதிகள்- விளக்கங்கள்.
விதி எண்-1
பத்தாம்
பாவாதிபதியுடன் இணைந்த கோள்கள்.
தொழில்
செய்யும் பத்தாம் பாவக அதிபதியுடன் இணைந்த கோளின் காரகத் தன்மையில் ஒரு சில சாதகர்கள்
தொழில் செய்வர் என்றுள்ளது. எனவே இக் கருத்து ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. இதே போல்
கீழே காணும் விதிகளும் ஆய்விற்குட்படுத்தப்பட்டன.
விதி எண்-2
பத்தாம்
பாவகத்தை பார்க்கும் கோள்
இந்திய
சோதிடத்தின் கோள்களின் பார்வைக்கு கூடுதல் பலம் உள்ளதாக எழுதப்பட்டுள்ளது….பத்தாம்
பாவகத்தை பார்க்கும் கோளின் தனமையில் தொழில் உள்ளதா?
விதி எண்-3
இலக்ன
நட்சத்திராதிபதி
ஒருவர்
இலக்ன பாகை இருக்கின்ற நட்சத்திர அதிபதியின் தொழிலை செய்வார் என்றுள்ளது.
விதி எண்-4
பத்தாம்
பாவகத்தில் உள்ள கோள்கள்.
பத்தாம்
பாவத்தில் உள்ள கோள்களின் தொழில்கள்…
விதி எண்-
5
பத்தாம்
பாவக அதிபதிக் கோள் நின்ற நவாம்ச அதிபதிக்கோளின் தொழில்.
விதி எண்-6
பத்தாம்
பாவ அதிபதிக்கோள் நின்ற இராசி அதிபதிக் கோளின் தொழில்.
விதி எண்-7
இலக்ன
அதிபதிக்கோளின் தொழில்
.
விதி எண்-8
பத்தாம்
பாவக அதிபதிக்கோளின் தொழில்.
விதி எண்-9
பத்தாம்
பாவக அதிபதிக்கோள் நின்ற நட்சத்திர அதிபதிக் கோளின் தொழில்.
விதி எண்-10
இலக்ன
அதிபதிக்கோளுடன் இணைந்த கோளின் தொழில்கள்…..
கோள்களின்
பங்களிப்புகள் எத்தனை விழுக்காடுகள் இடம் பெற்றுள்ளன என்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன….
இவ்வாறு
ஆய்விற்கு வித்திட்டும் ஆய்வு நடைபெறாதபொழுது…இங்கு எந்த முறை சிறந்தது என்று
எப்படிக்கூற முடியும்… வாடிக்கையாளருக்கு சரியான எதிர்காலத்தைக் கூறாமல் அவர்களை
திசை திருப்பி தோசங்களினால் பலன்கள் நடைபெறவில்லை.. அதனால் அதற்கு பாரிகாரமாக
யாகங்களையும் ,கோயில் வழிபாட்டையும் கூறினால் எப்படி சரியாகும்……
சரி
அவர்கள் படியே தோசபரிகாரம் செய்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்றால் ,,,,,,,,,,,,,,,,,,
கோள்களின் தோசத்தினால் சிறையில் வாடும் அன்பர்களுக்கு அவர்களுக்குரிய பரிகாரம்
செய்தால் விடுதலை கிடைத்து விடுமா????? ((((((((((( தோசத்தினாலோ அல்லது தீய பாவகச்
செயலினாலோ சிறைக்கு செல்லவேண்டும் என்பது சோதிட விதியாகும். இதைக் கூறுவதே நமது
கடமையும் ஆகும்…. இந்த சாதகர்களை ஆய்வு செய்தால் எந்த காலத்தில், எந்த கோளின்
பாதிப்பில், எந்த பாவக தசா புத்தியில் சிறைக்கு சென்றார்கள் என்று கண்டு
பிடிக்கலாம்… அதைக்கொண்டு நமது வாடிக்கையாளர்களுக்கு பலன் கூறாலாம்.. இது போன்று
பல நடவடிக்கைகளை ஆய்வு செய்து எதிர்காலப் பலன்களைக்கூறலாம்…. ஆனால் அவை எல்லாம்
இல்லை……
நான்
தான் பெரிய சோதிடன் ,எனது முறையே சிறந்தது, எனக்கு எல்லாம் தெரியும் என்று மற்றவரை
மட்டம் தட்டுவது, போன்ற செயல்களினால் யாருக்கு இலாபம்…. அவர்களே தங்களைத் தாங்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள்……..
வழக்கறிஞர்கள்
தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் தாக்கி பேசிக்கொள்வதில்லை….
ஏனெனில் இவருடைய திறமை உடனே தெரிந்து விடும்.. அவர்களுக்கு வெற்றியும், தோழ்வியும்
ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்…. அதனால் தங்களவர்களை தாக்கிக் கொள்வதில்லை…. அதேபோல்
மருத்துவர்கள்
தங்களுக்குள் தாக்கிக்கொள்வதில்லை…பொறியியளாலர்களும் , கணக்கியளாலர்களும் அப்படியே…..
ஆனால்
சோதிடர்கள் ………. பாவம் இவர்களைக் கவனிக்க நாதியே இல்லாதவர்கள்….. ஏமாந்த
சோதிடர்களை வைத்து யாராவது ஒரு ஏமாற்றுக்கார சோதிடர் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்…..
இது ஏமாற்றும் காலம்…. (
தொடரும் )
பேராசிரியர்.
முனைவர். தி.விமலன்..
Tuesday 21 April 2015
நவக்கிரகம்-இனக்குழு சமயம் – குலசாமி - /// 21-04-2015..
03:40
இனக்குழு சமயம் – குலசாமி - நவக்கிரகம்.
அன்புடன் அனைவரையும் எனது பிளாகில்
வரவேற்கிறேன்.
சமயம் {மதம்} ;
மதம் என்பது, மனிதனையும் கடவுளையும்
இணைக்கும் கண்ணி ஆகும். கடவுளால் விதிக்கப்பட்டு , கடவுள் நம்பிக்கையுள்ளவரைக் கட்டுப்படுத்துகிற
நடத்தை பற்றிய விதிகள் ,சூத்திரங்கள்,வழிபாடுகள்,சடங்குகள்,கோட்பாடுகள் ஆகியவற்றின்
கூட்டுத் தொகுதிதான் மதம் ஆகும்…..மதம் என்பதை தமிழில் ”சமயம்” என்று கூறுகிறார்கள்….
சமயங்களை இரண்டு முக்கிய பிரிவாக உள்ளன. அவை 1. இனக்குழுசமயம்..2.
நிறுவன சமயங்களாகும்….
இந்த பகுதியில் இனக்குழு சமயத்தை
விளக்குகிறேன்…..
1.இனக்குழு அல்லது நாட்டுச் சமயங்கள்…. \
இனக்குழுசமயங்கள் நிறுவனமற்றதாகும்.வரலாற்றில்
பழமை வாய்ந்ததாகும்..கி.மு6000 த்திலிருந்து இன்று வரை இச்சமய வழிபாடு இன்றும் தொடர்கிறது.இதன்
அடிப்படையில் நமது கிராமங்களில் பலவித குலதெய்வ வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இச்சமயம் இயற்கையோடு மிக நெருக்கமாக ஒன்று படுத்திய வாழ்க்கை முறையை நடத்தி செல்கிறது..
வாழ்வியல் முறை
இவர்கள் காவல் தெய்வங்கள் போன்ற
பல தெய்வ வழிபாடுகளை கொண்டு இருந்தனர். உணவு சேகரிப்பு முக்கிய பணியாகும். மீன், கிழங்கு,தேன்,பழம்,
காய் என உணவை சேகரித்து பின்பு பகிர்ந்து உண்டனர்…கூட்டு பண்புடன் கூட்டம் கூட்டமாக
ஒர் இனக்குழுவாக வாழ்ந்தனர்… ஒரே இரத்த உறவு கொண்டவர்களாகவும், மூடிய வாழ்க்கையுடையவர்களாகவும்,
தங்கள் கூட்டங்களுக்குள் விசேச பரிவர்த்தனை இல்லாதவர்களாகவும் இருந்தனர்…தங்களுக்குள்
திருமணம் முடித்தனர். ஒருதார மணம் கிடையாது…தாய்வழி இரத்த உறவுகள் தான் இம் மக்களின்
பரம்பரையாக எடுத்துக் கொள்ளப்பட்டன….
பெண்களே பெரும்பாலும் இனக்குழுக்களின்
தலைவராக இருந்துள்ளனர். தாங்கள் வாழும் இடம், மரம், கல்,பூமி, ஆகியவற்றை புனிதமாக போற்றினர்..இனக்குழுவின்
தலைவரே மாந்திரீகர், புரோகிதர்,சோதிடர்,வைத்தியர்,ஆசிரியர்,சாமியார் போன்ற அனைத்து
அதிகாரங்களும் உடையவராவார்….
சமய நம்பிக்கை;
இனக்குழுவினர் ஒரே குலம், ஒரே
இரத்த உறவு கொண்டவர்களாக இருப்பதால் , தோற்றத்தில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பர்….தங்கள்
குழுவிற்கு தனியாக ஒரு குறியீடு ஏற்படுத்திக் கொள்வர்….மலை,பசு,சூரியன்,சந்திரன்,தண்ணீர்,மரம்,பறவை,விலங்கு,என
குழுவை அடையாளப் படுத்திக் கொள்வர். இந்த குலக் குறியீடுகள் மிக மிகப் புனிதமானவையாகும்.
இனக் குழுவின் புனித சின்னமாகும்…தங்களுடைய நாடி, நரம்பு, உயிர் ஆகிய அனைத்தையும் குலகுறியுடன்
தொடர்பு படுத்தி வாழ்ந்து வந்துள்ளனர்…
ஒரு இனக்குழுவிற்கு மரம் குலக்குறியீடாக
இருந்து ,அதை யாராவது வெட்டினால் தலைவருக்கு வலிக்கும் என்று நம்பினர்… எனவே அனைத்து
வகைச் செயல்களும் குலக் குறியீட்டை மையமாக வைத்தே நடத்தியுள்ளனர்… தங்களுடைய எண்ணம்,சிந்தனை,செயல்,
ஆகிய அனைத்தும் குலக்குறியீட்டை அடிப்படையாகக் கொண்டதால் அனைத்திற்கும் உருவம் உண்டு
என்று நம்பினர்….
இனக்குழுவின் குலக்குறியிடு
ஒரு விலங்காக இருந்தால் திருவிழா போன்ற நாட்களில் அதை வேட்டையாடுவார்கள். பின்பு அந்த
விலங்கை அனைவரும் பகிர்ந்து உண்ணுவார்கள்…இதனால் குலக்குறியீடுடன் தங்களது இரத்த உறவை
ஏற்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் குலக்குறியிடு நாளடைவில் கடவுளாக வழிபட்டு வந்தமையால்,
கடவுளும் இவர்களுடன் இரத்த உறவு வைத்துக் கொண்டுள்ளார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு
பகிர்ந்து உண்ணப்பட்டது….ஆனால் மற்ற நாட்களில் அவ்விலங்கை வேட்டையாடக் கூடாது என்ற
கட்டுப்பாடும் இருந்துள்ளது….
இவர்களுடைய வாழ்வு முறை சுழற்சிவிதியின்
படி அமைந்துள்ளது…தங்களது குழந்தைகளுக்கு தாத்தா பெயர்,அப்பா பெயர்,பாட்டிபெயர், என
திரும்ப, திரும்ப ஒரெ பெயரே வைக்கப்பட்டது. கிறித்துவத்தில் அப்பமும்.ரசமும், பகிர்ந்து
கொண்டதால் இயேசுவின் இரத்தம் ,சதையை உட் கொண்டதாக அமையும்..அவர் உள்ளிருந்து நம்மை
காப்பாற்றுவார் என்று நம்பப் படுகிறது…
கிராம விழாக்களில் பலி,படையல்,கூட்டு
உணவு இறைவனுக்குப் படைக்கப்பட்டு,,,பின்னர் மானுடத்தால் உண்னப்படுகிறது. இதன் மூலமாக
இறைவனுக்கும், மானுடத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
”பகவான்” என்ற சொல் பாகம், பங்கு
என்று பங்காளி போல் இறைவனுக்கும் பக்தர்களுக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக கருதி இறைவனை
பகவான் என்ற சொல்லால் அழைக்கிறோம்
உலகில் உள்ள அனைத்திற்கும் உயிர்
உண்டு என்றும் சிலவற்றிற்கு அடர்த்தியான உயிர் தன்மை உண்டு என்று நம்பினர்… மலை முகடு,பச்சைமரம்,
வீட்டின் மூலைப்பகுதி, மரங்களின் உச்சிக்கிளை, நடுப்பகல்,நடுஇரவு, பிறப்பு ,பருவமடைகிற
வயது, கருக்கல் நேரம், கிழக்கும்-மேற்கும் சந்திக்கும் பகுதி என இரட்டை தன்மையுடன்
கூடிய நிகழ்வுக்கு ஆவித்தன்மையை ஏற்றி, அதில் ஆவிகள் வசிப்பதாகவும் நம்பினர். அதனிடத்தில்
பயமும்,பக்தியும் கொண்டிருந்தனர். இடில் பக்தியைவிட பயமே அதிகமாக இருந்தது. செய்வினையின்
போது ஆவிக்கோட்பாட்டின்படி அதற்கு உயிர்தன்மை உள்ளது என்று நம்பினர்…
தன் இனக்குழு மக்களின் அறிவியல்,இயற்கை
சார்ந்த.ஒன்றை பாவனை செய்வது மந்திரம் ஆகும். { ஆனி மாதத்தில் மழை வரவில்லை என்றால்
மழை வரத் தூண்டுவார்கள்.அதற்காக பாவனைச் சடங்கு செய்வது மந்திரம் எனப்பட்டது. மழை வேண்டி
களிமண் உருண்டையை மரத்தின் கீழ் வைப்பார்கள். பின்னர் அம்மரத்தின் மேல் பகுதியில் தண்ணீரைத்
தெளிப்பார்கள். இம்மாதிரி பாவனைச் சடங்குகள் மூலம் மழை வரத் தூண்டுவார்கள்… இதனால்
இயற்கை மழை வரும் என்று நம்பப்பட்டது.} தற்பொழுது செய்வினை பற்றிய கருத்துக்கள் அனைத்தும்
இதன் அடிப்படையில் வந்ததாகும்.
குறியீட்டுத் தளம்..
இனக்குழு சமயத்தில் அடர்த்தியான
குறியீட்டுத்தன்மை இருந்தது. திருமணம்,பிறப்பு, அனைத்திற்கும் சடங்குகள் இருந்தன..வாழ்க்கையின்
பிரச்சனைகள் அனைத்தும் குறியிட்டுத்தளத்திற்கு சென்றுவிடும்… நோய்களினால் ஏற்படும்
துன்பங்கள்,மானுட மனதில் ஏற்படும் அச்சங்கள் போன்ற அனைத்தும் குறியீட்டுத்தளத்திற்கு
சென்றுவிடும்…{ எ.கா} வாழ்வில் தீய நிகழ்வுகள் ஏற்பட்டால்,,,,புதியதாக ஏதாவது வாங்கினாயா?
அல்லது செய்தாயா/ போன்ற வினாக்கள் குறியீட்டுத்தளத்தில் கேட்பார்கள்….
புனிதம்-புனிதமற்றது…
சமயங்களின் அடிப்படை ஆணிவேர்
புனிதம்-புனிதமற்றது என்ற இரண்டு பிரிவுகளாகும்…
நல்லது.கெட்டது, திசைகள், நேரம்,
செயல்கள், கிழமைகள்,,குணம்,சகுனம்,ஆகிய அனைத்திலும் புனிதம்-புனிதமற்றது என்ற இரண்டு
தன்மைகளும் இனக்குழு சமயத்திலிருந்தே பார்க்கப் பட்டன. இதனடிப்படையிலேயே உயர்ந்தது-தாழ்ந்தது
என்ற கருத்துக்கள் தோன்றின.
இனக்குழு சமயத்தின் பண்புகள்..
இனக்குழு சமயத்திற்கு என்று மூலநூல் இருக்காது..
சமய கட்டமைப்பு,கட்டுப்பாடுகள் கிடையாது.
அதிகாரம், எல்லைகள் முடிவு செய்யப்படாது.
படைப்புத்தன்மை இருக்கும்.
புதுப் புது உத்தரவுகள், சிந்தனைகள் கூடியவளர்ச்சி
நிலை பங்கேற்பு தன்மையிருக்கும்.
சமரசம் செய்து கொள்ளலாம்
பக்தி இருக்கும் ,பணிவு இருக்க வேண்டியது இல்லை..
மூலத்தை மாற்ற முடியும்.. இதுவே இனக்குழு சயங்களின் பண்புகளாகும்..
தற்பொழுது நாம் கிராமங்களில்
வழிபடும் குலசாமி வழிபாடுகள் அனைத்தும் இனக்குழு வழிபாடுகளின் மறு அமைப்பாகும்… இப்பொழுதும்
மேலே கூறப்பட்ட அனைத்து விதிகளும் நமது குலசாமி வழிபாட்டில் கடைபிடிக்கப்படுகின்றன..
இதில் கூறப்பட்ட எந்த விதியும் மற்ற சமயங்களில் காணமுடியாது…{ எடுத்துக்காட்டாக இனக்குழு
சாமியைக்கூட மாற்ற முடியும்,ஆனால் மற்ற சமயங்களில் எதையும் மாற்றமுடியாது..}
நவக்கிரகம்
இனக்குழுவில் பொதுவாக அனைத்தும்
வழிபடுவதால் தனியாக நவக்கிரக வழிபாடு என்று ஒன்று கிடையாது…இங்கு அனைத்தும் தங்களைக்
காக்கும் குலக்குறியீடு கடவுளே தீர்த்து வைக்கும் என்று நம்புவதால் மற்ற அனைத்தையும்
பிரித்து வைத்து வணங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது…..
அன்புடையீர் பெரியோர்களுக்கு வணக்கம்…
இந்தியாவை பொருத்தவரை காலத்தால் முந்திய சமயம் [ கி.மு6000முன்னிருந்து தற்பொழுது வரை வாழ்ந்து கொண்டிருக்கின்ற } இனக்குழு சமயமாகும்... ஆதி மானுடத்தின் சமயமும் ஆகும்.....மக்கள் ஒவ்வொரு குழுவாக பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்....
அந்த வாழ்வியல் முறையில் தங்களுக்குப் பிடித்தவற்றை கடவுளாக வழிபட்டு வந்துள்ளனர்.....இங்கு சிலகட்டுப்பாடுகள், விதிகள் ஏற்படுத்தி வழிபாடுகள் செய்தனர். தங்களின் கோரிக்கைகள் நடைபெறவில்லை என்றால் கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மாற்றிவிடுவர்....நிரந்தரமான நூல் வடிவ விதிகள் இன்று வரை ஏற்படுத்தவில்லை....
இதில் இறைவனாக இயற்கையின் அனைத்தையும் வணங்கி வந்துள்ளனர்.....இந்த கடவுள்களை கிராமம் தோறும் காணமுடியும்....இவற்றிற்கு பூசாரிகள் என்று அழைக்கப்படும் பொது அமைப்பினரே வழிபாடுகளை செய்து வருவர்.....இங்கு நவக்கிரக வழிபாடு என்று ஒன்றும் கிடையாது. பொதுவாக தங்கள் குலம் விருத்தி அடைவதற்காக பொதுவான கடவுளை ஏற்படுத்தி வழிபட்டு வருகின்றனர்.........
.தற்பொழுது புதிதாக கட்டப்படும் கோயில்களில் வேண்டுமானால் உருவாக்கலாமே தவிர குலசாமி கோயில்களில் நவக்கிரக வழிபாடுகள் இல்லை........
மிக்க நன்றி....
Professor.Dr.T.Vimalan.
Ph.D.
Subscribe to:
Posts (Atom)