VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Tuesday 30 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்--6 29/09/2014.

இந்தோ-ஈரானியர்கள் : இந்திய -ஐரோப்பியக் கலாச்சாரம், தனக்குள் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டுள்ளது. அவை, இந்தோ-ஈரானியம், இந்தோ-ஆர்யம்,ஆர்யம் என்று பிரிகின்றன.இவற்றின் தலைப்பிற்கேற்ப சிறிய குறிப்புகளாக விளக்க முற்படுகிறேன்.இந்தொ-ஈரானியர்கள் என்று அழைக்கப்
படுபவர்கள்,யூப்ரடீஸ்-டைகிரீஸ் நதி சார்ந்து வாழ்ந்தமக்கள் என்று முன்னரே
அறிந்துள்ளோம்.இந் நாகரீகத்தின் எல்லைப் பகுதிகளாக வடக்கே அனடொலியன் பீடபூமியும்,தெற்கே பாரசீக வளைகுடாவும்,மேற்கே அரேபிய- சிரியா பாலைவனப் பகுதிகளும்,கிழக்கே ஈரானிய பீடபூமிகளாகவும் இருந்துள்ளன. இக்கலாச்சாரம்(நாகரீகம்) கி.மு.6000 ல் தோன்றியதாகும். அதனால் கிறிஸ்து பிறப்பு வரையிலான 6000 ஆண்டுகள் இடைவெளியில் இப்பகுதியில் வாழ்ந்த மக்களை பல்வேறு பெயர்களில் அழைத்துள்ளனர். அவற்றில் சுமேரியம்,மெசபதோமியம்,அக்கேடியம்,அசீரியம்,பாபிலோனியம், சால்தியம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக இருந்துள்ளன.
சுமேரியம் ; கி.மு.6000க்கு முன்னர் வாழ்ந்த உலகத்தின் தொன்மையான கலாச்சாரத்தின் பட்டியலில் இடம் பெற்றவராவர். இயற்கை வழிபாடுகளும்,உருவவழிபாடுகளும்,சூரியன் போன்ற கோள்கள் வழிபாடுகளும் செய்துள்ளனர். இனக்குழுவாக வாழ்ந்த அமைப்பு படிப்படியாக வளர்ச்சியடைந்து பெரிய கூட்டமாக மாற்றி அமைக்கப்பட்டன. அவற்றிற்கு தலைமையாக அரசர் போன்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. அந்த அரச கூட்டத்தினர்க்கு என்று புதிய கடவுள்களும், வழிபாடு செய்வதற்குரிய விதிகள், கட்டமைப்புகள் போன்றவையும் எற்படுத்தப்பட்டன. இவ்வாறு காலத்திற்கேற்ப பல கடவுள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இவர்களுக்குப்பின்னர் இப்பகுதியில் வாழ்ந்த மக்களையும்,அவர்களின் வாழ்வியல் கலாச்சாரத்தையும் இனணத்து பல பெயர்களில் அழைத்துள்ளனர்.
மெசபதோமியநாகரீகம் (கி.மு.3000), அசீரிய நாகரீகம் (கி.மு.2000),பாபிலோனிய நாகரீகம்(கி.மு.1800) என்ற பெரிய நாகரீகங்கள் ஏற்பட்டுள்ளன.இந்நாகரீகங்கள் அனைத்திலும் காலத்திற்கேற்ப கடவுள்கள், வழிபாடுகள் மாறிக்கொண்டே வந்துள்ளன. வானத்தில் உள்ள நட்சத்திரங்கள்,கோள்கள் ,கிரகணகால நிலைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் உலகின் வானசாத்திரம், சோதிடசாத்திரத்திற்கு பெரிதும் துணை புரிந்துள்ளனர். வானசாத்திரமும், சோதிடசாத்திரமும் இவர்களின் கண்டுபிடிப்பு ஆகும். பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியான வானசாத்திரம்,சோதிட சாத்திரக் கண்டுபிடிப்புகள் பாபிலோனியப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின்னர்(கி.மு.500) கிரேக்கத்தில் வளர்ச்சியடையத் தொடங்கின. கிரேக்கத்தின் வளர்ச்சியடைந்த வானசாத்திர ஆய்வுகளினால் வானத்தில் உள்ள இராசி மண்டலத்திற்கு கிரேக்க மொழியில் பெயர்கள் சூட்டப்பட்டன. இவ்வாறு ஒரு பக்கம் வானசாத்திரம்,சோதிடசாத்திரம் வளர்ச்சியைப்பெற்றன.
இங்ஙனம் வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையேதான் கி.மு3000க்கு முன்னர் இந்திய ஐரோப்பியர்கள் குடிபெயர்ந்தனர். இக்குடிபெயர்ப்பில்,இங்குள்ள கடவுள்கள், இறை வழிபாடுகள் கட்டமைப்புகளுடன் ஒன்று பட்டுள்ளனர். கி.மு.2500க்குப் பின்னர் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு ஒருபிரிவினர் குடி பெயர்ந்தனர். இவர்களை இந்தோ-ஆரியர் என்று அழைக்கப்பட்டனர்.
     

Wednesday 24 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்.5---25/09/2014.

 திராவிடர்கள் : ஆரியர் வருகைக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த மக்களை  திராவிடர்கள் என்றே அழைக்கின்றனர். இவர்களுக்குள் இனக்குழு பிரிவுகள் தான் இருந்துள்ளன. சாதிய அமைப்பு ஏற்படுத்தப் படவில்லை. ஆதலால் குழுக் குழுவாக வாழ்ந்த இவர்களுக்கு பொதுத் தெய்வ வழிபாடுகள் இல்லை. பொது ஆட்சியமைப்பும் இல்லை. எனவே இயற்கையில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தனர். மாமிச உணவும் உண்டு. சைவ உணவும் உண்டு. தங்கள் இனக்குழுவிற்குள்ளேயே திருமணம் நிகழ்த்தப் பட்டதால் மற்ற குழுவுடன் தொடர்புகளும் இல்லாமல் வாழ்ந்துள்ளனர். தங்கள் கடவுள் வழிபாடுக்கு என்று தனி ஒரு இடத்தையும் தேர்வு செய்துவழி பட்டனர். இவர்களுடைய உடலின் நிறம் கருப்பு ஆகும். ஆரியர் வருகைக்குப் பின்னர் இனக்குழுவினருடைய குறீயீடு,உருவ வழிபாடுகள் அழிக்கப் பட்டன. பொதுத் தெய்வ வழிபாடுகள் ஏற்படுத்தப் பட்டன. கடவுள் வழி பாட்டிற்குரிய இடங்களும் அழிக்கப்பட்டன.

இந்தோ--ஐரோப்பியர்கள்: ஐரோப்பாவில் உள்ள வால்கா நதி சார்ந்த மக்களின் தொடர்ச்சியான இடமாற்ற வாழ்வே இந்திய ஐரோப்பிய கலாச்சாரம் என்று அழைக்கப்படுகிறது. இவர்களின் நதி சார்ந்த இடப் பெயர்ச்சியினால் பல் வேறு கலாச்சாரப் பெயர்களையும் பெறுகின்றனர். இவர்களின் இடப்பெயர்ச்சியின் காலம் கி.மு.4000 க்கு முன்பிருந்து தொடங்குகிறது. இந்திய ஐரோப்பியர்கள் தங்களுடைய உணவு ,மேய்ச்சல் நிலங்களிற்காக குடி பெயர்ந்த பொழுது ஒரு பிரிவினர் கிரேக்கத்திற்கு சென்றனர். ஒருபிவினர் நைல் நதிக்கும், மற்றொருபிரிவினர் யூப்ரடீஸ், டைகிரிஸ் நாகரீகத்திலும் கலந்துள்ளனர். இக்குடிப்பெயர்ச்சி ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகள் கால இடைவெளியில் நடைபெற்றுள்ளன. ஆதலால் இந்தோ-ஐரோப்பியர்கள் தாங்கள் கலந்த கலாச்சாரப்பிரிவினரின் வாழ்வியல் அமைப்பில் ஒன்று பட்டனர். அதனால் கலப்புடைய கலாச்சார வாழ்வும் ஏற்பட்டன.
இவ்வாறு பிரிந்துபட்ட கலாச்சார அமைப்பில் யூப்ரடீஸ்,டைகிரீஸ் நதி சார்ந்த கலாச்சாரம்(இந்தோ-ஈரானியம்)நம்முடைய இந்து சமயத்திற்கு சிறிது பங்களிப்பும் செய்துள்ளது. 

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்- 4 --24/09/2014

இனக்குழு சமயத் தெய்வங்கள் ; இனக்குழு வாழ்க்கை என்பது சமயத் தோற்றங்க்ளுக்கு முன்னர் வாழ்ந்த அமைப்பாகும். ஆதலால் இங்கு தெய்வங்கள் என்பது இயற்கையில் உள்ள மரம்,மலை,விலங்கு,சில குறீயீடுகள், தாய் தெய்வங்கள்,மூதாதைகள் போன்று சில சிலைகளை உருவகப்படுத்தி  குறீயீடு வழிபாடுகளாக அமைக்கப்பட்டது. சமய நூல்கள் இருக்காது, மாறுபடக்கூடிய விதிகளே ஏற்படுத்தப்பட்டிருக்கும். ஆடல்,பாடல். கொண்டாட்டங்கள் என்று தெய்வீக வழிபாடுகள் இருக்கும். நிலையான குறீயீடுகள் தெய்வங்களாக இருப்பதில்லை.சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் குறியீடுகளும் மாறிக் கொண்டே இருக்கும். எனவே இனக்குழு மானுடம் தனது தெய்வீக வழிபாட்டில் இயற்கையின் குறியீடுகளை தெய்வமாக வழிபாடு செய்தனர். 
பரிணாம வளர்ச்சியில் ஆண் தனது துணையின்றி பெண்கள் மக்கட் பேறு அடைய முடியாது என்று எப்பொழுது அறிந்து கொண்டானோ அப்பொழுதிலிருந்து தனது ஆதிக்கத்தை இனக்குழுவில் நிலைப் படுத்திக் கொண்டான். இதனடிப்படையிலேயே மொகஞ்சதாரோ நாகரீகத்தில் காணப் படும் லிங்கம் (யோனி) வழிபாடுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆதலால் இனக் குழுவினர் இயற்கைக் குறியீடுகளையும்,சிலைகளையும் வணங்கி வந்துள்ளனர். எனவே இந்தியர்களின் ஆதி மக்கள் உருவ வழிபாடுடையவர் ஆவர். 
நதிசார்ந்த வாழ்வியல் அமைப்பு; கி.மு.4000--2000 வரை வாழ்ந்த சிந்து சமவெளி மக்களும் தங்களுடைய தெய்வீக வழிபாட்டில் உருவ வழிபாட்டு அமைப்பையும் வணங்கியுள்ளனர். இவர்களே சிந்து நதி நாகரீகத்தினர் என்று பாரசீக கலாச்சார மக்களால் அழைக்கப்பட்டனர்.(பாரசீகக் கலாச்சாரம்-யூப்ரடீஸ்,டைகிரீஸ் நதி சார்ந்ததாகும்.) பாரசீகர்களால்,சிந்துக்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள் நாளடைவில் சிந்து என்ற சொல் பிறழ்ந்து இந்து என்று ஆனது. அதிலிருந்து சிந்து நதிக்கு கிழக்கில் வாழ்ந்த மக்கள் அனைவரும் இந்துக்கள் என்றுஅழைக்கப்பட்டனர். இவர்கள் வழிபடும் தெய்வீக அமைப்பிற்கும் இந்துசமயம் என்றும் பெயர் ஏற்பட்டது. ஆனால் தற்பொழுது நாம் கூறிக்கொண்டிருக்கும் இந்துசமயத்திற்கு (வேதகால கலாச்சாரம்) உருவ வழிபாடு என்பது இல்லை, கோயிலும் இல்லை.



Monday 22 September 2014

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்.-3

கடவுள்-தொடர்ச்சி. இயற்கையை வணங்கிய மானுடம், பின்னர் தனக்கு தீமையை கொடுக்கும் இயற்கை விளைவுகளையும் வழி படத் தொடங்கினர். அதனால் நில நடுக்கம்,புயல்காற்று,இடி,மின்னல்,பெருவெள்ளம்,நெருப்பு, போன்றவற்றை ஏற்படுத்தும் வானம்,நிலம்,காற்று,நீர்,நெருப்பு ஆகியவை கடவுளாக ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் மானுடத்திற்கு அச்சத்தை கொடுக்கும் அனைத்தும் கடவுளாக்கப்பட்டன. அதே போல் அச்சத்திலிருந்து காக்கும் அனைத்தும் கடவுளாக்கப்பட்டது. எ-கா. காட்டுப்பன்றி கடவுளாக்கப் பட்டது. அதை கொலை செய்யும் கூர்மையான ஆயுதமும் கடவுளாக்கப் பட்டது.( இதனடிப்படையிலேயே இன்று சைவ சமயத்தினரும்,வைணவ சமயத்தினரும் வணங்கும் கடவுள்களைக் காணமுடியும். காளைமாடு-நந்தி, நாய்-காலபைரவர், பாம்பு-ஆதிசேசன், சிங்கம்,புலி,குரங்கு,மயில்,கருடன், யானை,போன்று பல்வேறு விலங்குகள் இறைவனுக்கு கீழ் கொண்டு செல்லப்பட்டு வழிபாடும் செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் இறைவனுக்கு கட்டுப்பட்டு இருப்பதால் அச்சம் தவிர்த்து வாழ்க்கையை நடத்துங்கள் என்று மானுடத்திற்கு உணர்த்தப்பட்டன. அதேபோல் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் விலங்கினங்களால் ஆபத்து ஏற்படுமானால் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் ஆயுதமும் கடவுளாக்கப்பட்டது. சக்திவேல். சூலாயுதம்,சக்கராயுதம்,அரிவாள்,கத்தி,போன்றவையாகும்.) இவற்றின் அடிப்படையிலேயே கடவுள் வழிபாடுகள் தோன்றின.

கலாச்சாரம். இந்தியர்களின் கலாச்சாரம் இனக்குழு வாழ்விலிருந்து தொடங்குகிறது. பகுத்தறிவற்ற இனக்குழு வாழ்வில் கடவுள்கள் ஏற்படுத்தப்படவில்லை.மாறாக குழுவின் தலைமைக்கு கட்டுப்படுவர்.இங்கு பெரியதான சட்டங்கள் இல்லாததால் கலாச்சாரமான வாழ்வமைப்பு இல்லை.படிப்டியான பகுத்தறிவு வளர்ச்சியினால் சட்டங்கள் ஏற்படுத்தப் பட்டன. சட்டங்கள் அனைத்தும் வாழ்வியலை மையமாகக் கொண்டதால் முறையான கலாச்சார வாழ்வு ஏற்பட்டது. சட்டங்கள் அனைத்தும் தலைமைக்குகீழ் கொண்டு செல்லப்பட்டதால் வரையறையும், மறுவரையறையும் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும். இவ்வாறு ஒவ்வொரு சூழ்நிலைக்குத்தகுந்தாற்போல் மானுட வாழ்விற்கு தேவையான விதிகளை ஏற்படுத்தி வாழ்வதே கலாச்சார வாழ்வமைப்பாகும். இவ்வாறே இந்திய இனக்குழு மக்களும் சூழ்நிலைக்குத்தகுந்தாற்போல் விதிகளை ஏற்படுத்தி, உலகமே வியக்கும் இந்திய கலாச்சாரத்திற்கு வித்திட்டுள்ளனர்.  

இந்து சமயம்-அறிந்து கொள்ளுங்கள்--2

பகுத்தறிவு ; மானுடத்தின் உச்ச பட்ச வக்கிரமான அனைத்து செயல்களுக்கும் காரணமாகத் திகழ்வது பகுத்தறிவே ஆகும். இப்பகுத்தறிவு இல்லாமல் இருந்தால் மற்ற விலங்கினங்கள் போல் ஒரே துன்பத்துடன்(பசி)வாழ்க்கை முடிந்திருக்கும். ஆனால் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட பகுத்தறிவு மானுடத்தை மீள முடியாத துன்பத்தில் சிக்க வைத்துவிட்டது.எதை பகுப்பது என்று புரியாமல் அனைத்தையும் பகுத்து விட்டார்கள். இப்பவும் பகுத்து கொண்டேயிருக்கிரார்கள்.
         அச்சம்-துணிச்சல்/நல்லது-கெட்டது/துன்பம்-இன்பம்/கடவுள்-சாத்தான்/புனிதம்--தீட்டு/தலைவன் -தொண்டன்/உயர்வு-தாழ்வு /ஆண்-பெண் /போன்று ஆயிரக்கணக்கானஇருமைக்கொள்கைகளைக்கண்டுபிடித்துள்ளனர்.
இக்கண்டு பிடிப்புகளினால் மானுடம் தனக்கு நன்மை தரும் செயல்களை சிந்திக்கத் தொடங்கியது. அதன் விளைவால்ஏற்பட்டதேஉழைப்பாகும்.மற்ற விலங்கினங்கள் போல் உழைக்கத்தெரியாமல் இருந்த மானுடம், பகுத்தறிவினால் உழைப்பைக்கண்டுபிடித்து வாழ்வமைப்பை மாற்றி அமைத்தது.இதன் பெயரே கலாச்சாரமாகும். கலாச்சாரத்தின் கட்டமைப்புகள்    விதிகள்(சட்டங்கள்) என்ற வரையறைக்குள் அடங்குவதாகும்.
            மானுட உழைப்பினால் ஏற்படும் முடிவுகள் அனைத்தும் நன்மை-தீமை  என்று பகுக்கப்பட்டு அவற்றிற்கு தகுந்தாற் போல் கலாச்சாரக் கோட்பாடுகள் (விதிகள்)ஏற்படுத்தப்பட்டன.
          பகுத்தறிவைக் கொண்டு மானுடம் அச்சத்திலிருந்து விடுபடும் வழியை கண்டு பிடிக்கத்தொடங்கியது.அதன் ஒரு பகுதியே இறைக்கோட்பாடுகளாகும்

கடவுள் ; நன்மை கொடுக்கும் அனைத்தும் கடவுளுக்குப் பகுக்கப்பட்டது. தீமையைக் கொடுக்கும் அனைத்தும் சாத்தானுக்குப் பகுக்கப்பட்டது, எனவெ மானுடம் அச்சத்தின் பிடியிலிருந்து விடுபடும் அமைப்பாக கடவுள் கொள்கை ஏற்படுத்தப்பட்டது. கடவுளும்,சாத்தானும் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு இருப்பர். கடவுள் இல்லை என்றால் சாத்தானுக்கும் வேலை இல்லை. அச்சம் கொடுக்கும் அனைத்தும் சாத்தான் செயலாகும். துணிச்சல் மிக்க செயல்கள் அனைத்தும் கடவுளின் செயலாகும். பகுத்தறிவு பெற்ற மானுடத்தின் முதற் கடவுள் இயற்கையாகும். இயற்கையில் உள்ள மரம், செடி,கொடிகள், விலங்கினங்கள், தங்கள் கூட்டத்தை காத்த முன்னோர்கள் போன்றவற்றை வணங்கி வந்துள்ளனர். 

Sunday 21 September 2014

இந்து சமயம் அறிந்து கொள்ளுங்கள்.1

அன்புடையீர் வணக்கம்.
         
              நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய நாட்டின் தொண்மையான தெய்வீக வழிபாட்டில் எந்த சமயம் பழமையானது என்பதில் பல்வேறு கருத்துக்களை காணமுடிகிறது. இவற்றில் எது சரியானது என்ற ஆய்வில் ஏற்பட்ட முடிவுகளே இங்கு கருத்தாக உருவாக்கப்பட்டுள்ளது.
            உலகின்  உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இருக்கக்கூடிய ஒரு தன்மை அச்சம் என்பதாகும். தனது ஒவ்வொரு செயலிலும் அச்சம் என்பது மையமாக அமைகிறது. வலுவான உயிரினம், வலுவற்ற உயிரினத்தை உண்டு வாழ்வது இயற்கையின் அமைப்பாகும். எந்த உயிரினம் மிகவும் வலுவானது என்று முடிவிற்கு வர இயலாது.எனவே அச்சம் என்பது அனைத்து உயிர் வாழ்வனவற்றின் மையமாக உள்ளது. இதன் அடிப்படையில் மானுட வாழ்வும் அமைகிறது.
தொடக்க கால மானுடம்;
            இயற்கையின் பரிணாம வளர்ச்சியில்  மானுடம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்பது நாம் அறிந்த ஒன்றாகும். இப்பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வில் மானுடம் பெரும்பாலும் ஐந்தறிவு வாழ்க்கையே நடத்தி வந்துள்ளது. இவ்வாழ்வில் மானுடத்திற்கு உழைக்கத்தெரியவில்லை. ஆதலால் இயற்கையில் கிடைப்பதை உண்டு வாழ்ந்தது. உணவு ஒன்றே தேடுதலாகும். இந்த வாழ்விலும் அச்சம் மையமாகவே இருக்கும். இருப்பினும் அச்சத்திற்காக முறையான தெய்வீக வழிபாடு எதுவும்  ஏற்படுத்தவில்லை.                   இவர்கள் வாழ்வும் ஒவ்வொரு கூட்டமாகவே இருந்துள்ளது.ஆதலால் மற்ற விலங்கினத்தைப் போலவே உணவிற்காக ஒரு கூட்டத்திற்கும் மற்ற கூட்டத்திற்கும் சண்டைகளும்,அழிவுகளும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். கூட்டத்திற்கு தலைவியாக பெண்களே இருப்பர். ( ஒரு உயிர் மற்றொரு உயிரை உண்டு வாழும் அடிப்படையில், உயிரை பெற்றெடுக்கும் பெண்களே கூட்டதின் தலைவியாக இருந்துள்ளனர்.) நாகரீகம் கிடையாது.உடைகள் கிடையாது. அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை,போன்ற எவ்வித உறவுகளும் கிடையாது. ஆண்,பெண் என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே இருந்துள்ளன. இனப்பெருக்கம் என்பது மற்ற விலங்கினங்களைப் போலப் பொதுவாகவே இருந்துள்ளது. எனவே தொடக்ககால மானுடத்தின் தேடுதல் உணவு மட்டுமே ஆகும்.
            உணவு வேட்டையில் மற்ற விலங்கினத்திற்கும், மானுடத்திற்கும் பெரும் போராட்டம் ஏற்படும். விலங்கினத்தில் ஒன்றை மானுடம் அடித்து சாப்பிடும்.அதேபோல் மானுடத்தில் ஒன்றை விலங்கினம் அடித்து சாப்பிடும். மானுடத்திற்கு சமைத்து சாப்பிடத்தெரியாததால் விலங்கினத்தைப் போல் பச்சைக்கறியாகவே இறைச்சியை உண்பார்கள்.இவ்வாறு வாழ்வியல் உணவுப் போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.இதன் அடிப்படையில் ஒவ்வொரு உயிரினமும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தன.மானுடத்தின் படிப்படியான பரிணாம வளர்ச்சியில், இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏன்,எதற்கு,எப்படி என்ற வினா எழுந்தது. இதுவே ஆறாவது அறிவு என்று போற்றப்படுகிற பகுத்தறிவு ஆனது.